சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
இன்பொடு துன்ப மெல்லாம் எய்துவ கன்ம மென்னில் நன்புனல் சந்த னாதி நணுகவும் அணுக வொண்ணா மின்பொலி அழலி னோடு மேவுவ நன்மை தீமை என்செய்த தியம்பி டாய்நீ இவையெலாம் இயல்ப தாமே. |
21 |
காயத்தின் குணம தன்றிக் கண்டதான் மாவுண் டாயின் மாயத்திற் சொல்லி டாதே மனமுதல் ஆறி னுக்கும் நேயத்த தாக வேண்டும் அன்றியே நிகழ்த்து முண்மை தேயத்தின் முயற்கொம் பெல்லை செப்பு வோர்செய் தியாமே. |
22 |
அருவமே இறைவ னாகில் அறிவின்றா காய மாகும் உருவமே யென்னிற் பூதக் கூட்டத்தில் ஒருவ னாகும் மருவிய இரண்டுங் கூடி நிற்பவன் என்னின் மண்மேல் இருவிசும் பொருகல் லேந்தி நிற்குமோ இயம்பி டாயே. |
23 |
பூதத்தே அன்ன மாகி அன்னத்தால் உடம்பு புத்தி பேதித்தே மனமு மாகிப் பிரிந்தமை திருந்த இன்று வேதத்தே யுரைக்க என்னோ மேதினி யோர்க ளெல்லாம் கேதத்தே வீழ்ந்து வேறு நெறியல் கேட்கு மாறே. |
24 |
போகத்தை மண்ணிற்கண்டு விட்டுப்போய் விண்ணிற்கொள்ள மோகத்த ராகி அல்லல் முயன்றுழல் மூட ரெல்லாம் தாகத்தில் தண்ணீ கண்டு விட்டுப்போய்த் தண்ணீர் கேட்டுச் சோகித்தே உண்ண வெண்ணித் துயருறு வார்க ளந்தோ. |
25 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், சித்தியார், இலக்கியங்கள்