சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஞாலம்உண் டவனால் உண்டார் நல்லமு தமரர் என்றாய் வேலைநஞ் செழமா லாதி விண்ணவர் வெந்து சென்ற காலமின் றெமக்குக் காவாய் கடவுளே யென்ன நாதன் ஆலமுண் டிலனேல் தேவர் அமுதமுண் டிடுவ தெங்கே. |
291 |
அஞ்சியன் றரிதா னோட அசுரனைக் குமர னாலே துஞ்சுவித் தொருபெண்ணாலே தாரகன் உடல்துணிப்பித்(து) அஞ்சிடப் புரம்தீ யூட்டிச் சலந்தர னுடல்கீண் டோத நஞ்சினை யுண்டு மன்றோ நாயகன் உலகங் காத்தான். |
292 |
பார்த்தனார் இரதமேறிப் படைதனைப் பார்த்துச் சார்பைக், கூர்த்தஅம் பாலே எய்து கொன்ற சாளே னென்னத், தேர்த்தனி லிருந்து மாயை செய்துமால் கொல்லச் செப்பும், வார்த்தைநூ லாக்கிக் கொண்டாய் புரங்கொல் நூடல மதித்தி டாயே. |
293 |
மாயைதான் உயிர்க ளாகா துயிர்கள்தாம் மாயை யாகா மாயவன் இவைதா னாகான் இவைதானு மாய னாகயா ஏயுமாம் அநாதி யாக இறைபசு பாச மென்றே தூயவன் கலப்பி னாலே எல்லாமாய்த் தோன்று வன்காண். |
294 |
பாசத்தைப் பசுக்கள் விட்டுப் பதியினை அடைய முத்தி ஆசற்ற ஆக மங்கள் அறைந்திட அறிவின் றிங்கே மாசற்ற மால்மா சாகி மாயையு முறுவ னென்னில் கூசிப்பின் கொள்ளார் நல்லோர் உனக்காமிக் குழப்பு நூலே. |
295 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், மாயை, இலக்கியங்கள், னாலே