சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பரசுடன் பிறந்தான் தானும் பத்தனாயப் பரசி னாலே அரசறுத் தரனை நோக்கி அருந்தவம் பரிந்தான் அன்று பரசிய பரசு ராமன் பலதேவ னுலக மெல்லாம் உரைசெயும் உமையாள் கோனை உள்நினைந் தியோகி னின்றான். |
286 |
ஓதிய வாசு தேவர் தமைஉப மணியு தேவர் தீதிலா நோக்கஞ் செய்து சிவகரஞ் சிரத்திற் சேர்த்தி ஆதிபா லடிமை யாக்க அரிஉடல் பிராணன் அத்தம் ஈதெலாம் கொள்நீ என்றங் கிறைஞ்சினார் அறிந்தி டாயே. |
287 |
பின்வரும் பரிதா னாகி அரியென்றாய் பின்பு வந்தால் என்வரு மீச னாலென் றறிகிலோம் இவுளி யார்க்கு முன்வரும் அவதா ரங்கள் முடிந்தமை அறிந்தா யன்றே பொன்வரும் சடையி னான்தன் புகழெங்கும் புக்க தன்றே. |
288 |
கைவரை மூல மேயோ எனக்கரிக் குதவுங் காட்டின் மொய்வரை எடுத்தான் மூலம் ஆயிட வேண்டு மோதான் ஐயனேமுறையோ என்றால் அரசனோ அங்குச் செல்வான் வையகங் காப்பான்செய்கை வழக்கன்றோ ஊர்காப்பான்போல். |
289 |
அன்றியும் ஆனை மாலுக் கடிமையாய் மூல மேயோ என்றிடு மதனால் மால்தான் இறைவனென் றியம்ப வேண்டா உன்றனக் கடிமை யானார் உன்னையெம் பெருமா னென்றால் இன்றுநீ வணங்கு முன்றன் எம்பெரு மானோ நீயே. |
290 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், மேயோ, இலக்கியங்கள், தேவர்