சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பிரமம்நா னென்ற போது பிரமனோ டரியுங் கூடிப் பரமனார் இகலி டாமே பார்த்திடர் பண்ணி நின்ற உரமனார் அழலு ரூபம் தன்னையு முணர மாட்டான் கரமனாள் திகிரி ஏற்றான் கடவுளென்றறைவதென்னே. |
296 |
தோரி இறையன் றென்றே சிவமுனி ததீசி யோடே போர்புரிந் திகல மாலைப் புக்கவன் பிடித்த டித்து மார்பினி லுதைத்து மால்தன் சக்கரம் வயிற்றில் வைத்திட்(டு) ஏர்மலி படைப டைத்திட் டரிபட வெறிந்தா னன்றே. |
297 |
சூலிகாண் இறைமால் அல்லன் சூலியைத் தொழுந்துயர் வாசன் மாலினார் மார்மி திப்பத் திருமறு மார்ப னாகி நூலினார் மார்பன் நோன்றாள் பட்டிடஞ் சுத்த மென்று பாலினார் கடலான்ஆங்கே பரிவொடும் திருவை வைத்தான். |
298 |
தவகுண னாய்மால் சென்று தீவியைள் சக்க ரத்தால் அவகுணஞ் செய்தன் றோடப் பிருகுவந் தவனைப் பார்த்துச் சிவனடய தறியே னாகில் இதுசெய்தோன் செறிகப் பத்துப் பவமென மொழிய மாலும் பயப்பட்டுப் பதறி வீழந்தான். |
299 |
பயப்பட்டுப் பரனைநோக்கித் தவம்பண்ணப் பரனும்தோன்றி நயத்தஞ்ச லென்று வேண்டிற் றென்னென நார் ணன்தான் பெயர்த்தருள் பிருகு சாப மெனஅன்பன் பிருகு வென்ன உயர்கொள்நீ பவந்தோ றென்ன ஓமென்றான் உலக நாதன். |
300 |
இப்படிப் பிருகு சாபத் தீரைந்து பிறப்பின் வீழ்ந்து மெய்ப்படு துயர முற்று வருபவன் விமலன் அல்லன் எப்படி யானுஞ் சொன்னேன் இறைஅரி அல்ல னென்றே மைப்படி கண்டன் அண்டன் மலரடி வணங்கி டாயே. |
301 |
சிவஞானசித்தியார் பரபக்கம் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், பரபக்கம், பிருகு, சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், பயப்பட்டுப், அல்லன், இலக்கியங்கள்