சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நிரீச்சுரசாங்கியன் மத மறுதலை
சுத்தன் அறிவன் புருடனெனில் சூழா தாகும் பிரகிருதி பெத்தம் நீங்கி னாலும்பின் பெத்த னாவன் பேரறிவால் கத்த மேவும் பிரகிருதி கண்டு கழிக்க மாட்டானேல் முத்த னாகான் சுத்தனுக்கு மூலப் பிரகி ருதியிலையாம். |
261 |
புருடன் பிரகி ருதிபெற்றால் போம் சிறிதங் குண்டாகிக், குருடன் முதுகின் முதுகின் முடவனிருந் தூர்ந்தாற் போலப் பிரகிருதி, இருட னிடத்தே இருந்தியங்கும் கன்மால் இறையன் றிரண்டினையும், மருட னுருவாய்ச் சேட்டிப்பித் தறியும் அமலன் அரனேயாம். |
262 |
அறியான் புருடன் பிரகிருதி அசேத நம்கா ரியத்தி னுக்குக், குறியாய் நாதன் உளனென்று கூறு முத்தி விவேகமெனில், செறிவாம் தளைபோ காதறியில் சேர்த்தோன் வேண்டும் செயலிற்போம், நெறியால் பணிசெய் துடற்பாசம் நீக்கிக் கொள்நீ நின்மலனால். |
263 |
14. பாஞ்சராத்திரி மதம் (264 - 301)
ஆதியாய் அருவ மாகி அகண்டபூ ரணமாய் ஞானச் சோதியாய் நின்ற மாயன் சுவேச்சையால் உருவு கொண்டு நீதியார் கருணை யாலே நீள்கடல் துயின்று நூலும் ஓதினா னென்று பாஞ்ச ராத்திரி உரைப்ப னுற்றே. |
264 |
உந்தியில் அயனை ஈன்றும் அவனைக்கொண் டுலகுண் டாக்கி அந்தநல் லுலக ழிக்க அரனையும் ஆக்கு வித்துத் யூந்திடுஞ் சகத்தி னுக்குத் திதிகர்த்தா தானே யாகி வந்திடும் தோற்றம் ஈறும் நிலைமையும் பண்ணும் மாயன். |
265 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், பிரகிருதி, நூல்கள், சித்தியார், பரபக்கம், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், மாயன், முதுகின், இலக்கியங்கள், பிரகி, புருடன்