சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
உன்னு கின்றபிர மத்தி லேசிறிதிவ் வுலக மானதென ஓதின்நீ, மன்னு கின்றசில கால மோடழியும் அழிய வந்துதவு மாயையால், தன்னி லொன்றுமெனில் வருத லோடிறுதி தருத லால்அதுச டத்ததாம், உன்னொ டச்சகமும் உண்மை யன்றுசட மென்ன வேஉறுதி மன்னுமே. |
256 |
வித்தெ ழுந்துமர மாய்வி ளைந்தமை விளம்பி னாய் உவமை வேறுநீ, நித்த மென்றவுரை பொய்த்து நீடுசட மாய்எ ழுந்தழியும் நின்பரம், ஒத்தெ ழும்பொழுது வித்தி னுக்கவனி யுண்டு தாரகமு னக்கெனா, பித்த னென்றுல குரைத்தி டும்பிரம மாயி னாய்இவைபி தற்றிலே. |
257 |
சூன கம்கடகம் மோதிரம் சவடி தொடரொ டாரம்மடி தோடுநாண், ஆட கந்தருவ தாகும் அப்படிய னைத்து மப்பிசம மாகுமேல், நீடும் அப்பணிகள் சௌ¢து ளோர்அவைபு னைந்து ளோர்களை நிகழ்த்திடும், நாடி டும்சகமி யற்று வோர் கொடு நடத்து வோர்உளர்ந விற்றிலே. |
258 |
அறிவி னோடுசெயல் மாறில் வீடதனை அணுகொ ணாதவைஇ ரண்டினால், உறுதி யானபிர மத்தி னோடழிய ஒன்ற லாமென உரைத்திகாண், இறுதி யேல்அதனொ டிசைவ தின்றிசைவ துள்ள தாயிடின்அவ் வின்பமே, பெறுதி நீஉடலொ டுயிர்க ளாய்அறிவு பிரியு மாறுசெயல் பெறுவதென். |
259 |
13. நிரீச்சுரசாங்கியன் மதம் (260 - 263)
மூலம் புரியட் டகம்விகிர்தி யாகி மூன்றாய்ப் பிரகிருதி தூட சூக்கம் பரமாயச் சுத்த புருடன் சந்நிதியில் பாலன் சேட்டை புரிந்துலகம் யோனி பலவாய்ப் பரந்தொடுங்கும் சால வென்று நிரீச்சுவர சாங்கி யன்றான் சாற்றிடுமே. |
260 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், சித்தியார், மத்தி, இலக்கியங்கள்