சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
மீன்ஆமை கேழல் நார சிங்கம்வா மனனாய் வென்றி ஆனாத இராமர் மூவர் ஆயனாய் அளித்தான் கற்கி தானாயும் வருவன் இன்ன மென்றவன் சாற்றித் தேவர் கோனாயும் நிற்ப னென்று கூறுவன் குறிப்பி னோடே. |
266 |
ஏழ்கடல் செலுவில் ஏற்றும் இருங்கிரி முதுகில் ஏற்றும் தாழ்தலம் முழுதுங் கண்டும் தபநியன் உடல்பி ளந்தும் வாழுல களந்தும் மன்னாய் மன்னர்க்கு மன்ன ராயும் பாழ்பட உழறப் பாரும் நோக்கும்பின் பரியு மாயே. |
267 |
பொய்கைவாய் முதலை வாயில் போதகம் மாட்டா(து) ஐயனே நாதா ஆதி மூலமே என்ற ழைப்ப உய்யயாம் பணிமால் ஓல ஓலவென் றோடிச் சென்று வெய்யவாய் முதலை வீட்டிக் கரிக்கும்வீ டருளி னானே. |
268 |
அலைகடல் கடைந்தும் வானோர்க் கமுதினை அளித்துந் தீய கொலைபுரி அசுரர் தம்மைக் கொன்றுல கங்கள் காத்தும் கலைமலி பொருளன் பர்க்குக் கருணையால் உரைத்தும் மிக்க தலைமையில் நிற்பன் மாய னென்றும்பின் சாற்றி னானே. |
269 |
மாயையாய் உயிராய் மாயா காரிய மாகி மன்னி மாயையாற் பந்தஞ் செய்து வாங்கிடும் அவனா லன்றி மாயைபோ காதென் றெண்ணி மாயனை வணங்கப் பின்னை மாயைபோம் போனால் மாயன் வைகுண்டம் வைப்பனன்றே. |
270 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், னானே, முதலை, இலக்கியங்கள், ஏற்றும்