சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
உன்னின் நியும் அநுபோக மென்றபொழு துற்றி டும் துவிதம் மற்றதிங்(கு), என்னில் இல்லையெனில் இல்லை நீயுமறி வின்மை கண்டஇடம் உண்மையேல், மன்னு மோருணர்வு வந்தி டும்முணர்வெ லாமு மாயையெனில் மாயையே, சொன்ன தோர்பிரம மாயி டும்பிரமம் மாயை யாய்அறிவு சோருமே. |
251 |
ஆர ணங்கள் தரு தத்து வம்அசிப தங்க ளின்பொருள் அறிந்திடாய், கார ணம்அதுவும் நீயும் என்றிருமை கண்டு வேறதின்மை கருதிடாய், நார ணன்பிரம னாலும் நாடரிய நாய கன்கழல்கள் நண்ணிநீ, ஏர ணைந்துபொலி சாத நங்கள் கொடு யோக ஞானமும் இயற்றிடே. |
252 |
12. பாற்கரியன் மதம் (253 - 259)
மன்னு மறையின் முடிவென்று மாயா வாதி உடன்மலைந்து பின்ன மாகிப் பிரமத்தைப் பேதா பேதம் சாதித்துப் பன்னு மொருநூல் அதுவாகப் பாரின் மீது பாற்கரியன் சொன்னஇதனை இந்நூலின் அகத்தே தோன்றச் சொல்லுவாம். |
253 |
சித்தே உலகாய்ப் பரிணமித்துச் சீவனாகித் திகழ்ந்த மையால், சத்தே யெல்லாம் முத்தியினைள் சாரக் கண்ட ஞானங்கள், வைத்தே மொழியும் மாமறைகள் சொன்ன மரபே வந்தக்கால், ஒத்தே கெட்டுப் பிரமத்தோ டொன்றாய்ப் போமென் றுரைத்தனனே. |
254 |
பாற்கரியன் மத மறுதலை
இயம்பு கின்றதுல காயி டாதுசட மின்றி நின்றுசட மாகியே, முயங்கு கின்றமையில் இலவணத்திரத முழுதுமே கனதை முயல்கைபோல், பயந்த தென்னில்அறி யப்ப டும்பொரும் அறிவு மென்றுபல வாகுமோ, தியங்கு கின்ற தெனு ரைத்தி டாய்கடின மாதி யாகிவரு சித்தனே. |
255 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், பாற்கரியன், சிவஞான, சாத்திரங்கள், சித்தியார், சித்தாந்த, பரபக்கம், சொன்ன, இலக்கியங்கள், மன்னு