சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சோதி மாமணிகள் ஊடு போனதொரு நூலு மானநிலை சொல்லிடும், நீதி யால்மணிகள் பேத மாகிஒரு நூலின் நின்றமைநி கழ்த்தினாய், ஆதி தானொருவ னாகி யேபல அநந்த யோனில் அமர்ந்தவன், பேதி யாதநிலை பேசினாய் உலகு பேத மேஇலத பேதமே. |
246 |
ஒத்து நின்றுலின் இன்ப துன்பமவை உற்றும் உற்றிடுவ தின்றெனும், பித்த உன்னரையின் உற்ற தேயிலது பெற்ற தின்றிலது பெற்றதேல், துய்த்த லென்னுறுதல் சீவ பாவமது சொல்லி னொன்றினுந்தோய் விலாமைநீ, வைத்து நித்தமன வாக்கி றந்தபர மென்ன மானமிலை இன்னமே. |
247 |
எங்கும் நின்றிடில் அவத்தை யின்றிடும் இசைந்தி டுங்கரண மென்னில்நீ, அங்கு நின்றபரம் எங்கொ ளித்ததது நின்ற தேல்அவை அடங்கிடா, இங்கு நின்றதொரு காந்த மானகல் இரும்பு சந்நிதிஇ யங்குநேர், தங்கி நின்றதெனில் நீங்கி மீளும்வகை தங்கி டாதுனுரை தப்பதே. |
248 |
இருள்பொ திந்ததொரு பரிதி இவ்வுலகில் இசையில் இன்றுடலம் நானெனும், மருள்பொ திந்ததொரு பிரம மிங்குளது மருவி நின்றஉரு ஒருவியே, தெருள்பொ திந்து பரம்நானெ னும்தௌ¤வு சென்ற போதுகதி யென்றிடும், பொருள்பொ திந்ததெனில் அமல னுக்குமலம் வருத லாலுளது புன்மையே. |
249 |
சுத்த மானதுப ரத்தி னுக்கணைவ தின்று சுத்தமத நாதிநீ, வைத்த மாயமுறு சித்(து) அசுத்தமுற மற்ற தற்கு மலம் வைத்தனை, ஒத்த சீவன்மல கன்ம மாயையுறு கின்ற காரணமு ணர்ந்திடாய், பித்த னேவிறகி னிற்பி றப்பதெரி யென்னில்வே றுபொருள் பெற்றதே. |
250 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், திந்ததொரு, தங்கி, இலக்கியங்கள், பித்த