சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பூதமதின் ஒன்றுபிரி யப்புலன் இறக்கும் நீதியினின் நிற்பன நடப்பனவும் முற்போல் ஓதும்வகை யாகிஉறு காரியம் உலந்தால் ஆதியவை யாம்இதனை யறிவதறி வாமே. |
16 |
இப்படி யன்றிக் கன்மம் உயிர்இறை வேறுண் டென்று செப்பிடும் அவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்ற மென்னோ ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித் தப்பில்ஆ காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே. |
17 |
சேய்திடும் கன்ம மெல்லாம் செய்தவர் தம்மைப் பற்றி எய்திடு மென்னில் இங்கே மாய்ந்திடும் ஏய்வ தெங்ஙன் மெய்தரு தூலங் கெட்டுச் சூக்கமாய் மேவு மென்னில் ஐயனே தீபம் போனால் அதனொளி யாவ துண்டோ. |
18 |
மாய்ந்துபின் வயலி லிட்ட வைதழை பலிக்கு மாபோல் ஏய்ந்திடும் கன்ம மென்னில் இட்டிடத் திசையும் மேனி ஓய்ந்துவந் தவரை உண்ணப் பண்ணுஞ்சோ£ றுதரத் தற்றால் வாய்ந்திடும் மலம் வயிற்றிற் கொண்டிடும் வழக்கு வைத்தாய். |
உருவமும் உணர்வும் செய்தி ஒத்திரா கன்மம் என்னின் மருவுகை விரல்கள் தம்மின் வளர்வுடன் குறைவுண் டாகி வருவதிங் கென்ன கன்மம் செய்துமுன் மதியி லாதாய் பெருகுபூ தங்கள் தம்மின் மிகுகுறைப் பெற்றி யாமே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், கன்மம், மென்னில், சித்தியார், சிவஞான, பரபக்கம், சாத்திரங்கள், சித்தாந்த, தம்மின், இலக்கியங்கள், கன்ம