சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
மன்னும் பிரமந் தனின்வானாய் வானின் வளியாய் அந்தவளி, தன்னின் அழலாய் அழலின்பால் சலமாய்ச் சலத்தில் தாரணியாய்ச், சொன்ன இதனின் மருந்தாகித் தோற்றும் மருந்தில் அன்னமாய், அன்ன மதனில் துவக்காதி ஆறு தாது ஆயினவால். |
226 |
ஆறு தாதுக் களும்கூடி வந்த கோசம் அன்னமயம் மாறில் பிராண கோசமயம் மன்னு மதனில் மனோமயந்தான் வேறு வரும்விஞ் ஞானமயம் மேவும் அதனின் அதுதன்னில் கூறி வரும்ஆ நந்தமயம் கோச மயம்பின் கூடியதால். |
227 |
கோச உருவில் பிரமந்தான் கூடித் தோன்றும் நீடுமொரு காசம் மருவும் கடற்தோறும் நின்றாற் போலக் கதிரவன்தன் வீசு கிரணம் உருவின்கண் வௌ¤ப்பட்ட டிடுவ ததிற்பற்றும் பாசம் அதனுக் கின்றாகும் என்றாற் பரத்திற் பற்றுண்டோ. |
228 |
அலகில் மணிக ளவைகோவை அடைந்த பொழுதின் அங்கங்கே, நிலவும் ஒருநூல் பலநிறமாய் நின்றாற் போல நீடுருவம், பலவும் மருவு பேதத்தால் பன்மை யாகும் பிரமந்தான், குலவு போக போக்கியங்கள் கொள்ளும் போன்று கொள்ளாதால். |
229 |
போற்றும் செயலால் பலநாமம் புனைந்து போக போக்கியத்தில், தோற்றும் நனவு கனவினுடன் சுழுத்தி துரியம் எய்தும் இதற்(கு), ஏற்ற கரணம் நிரைநிரையே ஈரேழ் நாலொன் றெல்லாமும், மாற்றி நிற்கும் கேடின்றி வந்த போகம் மாய்ந்திடல். |
230 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, பரபக்கம், பிரமந்தான், நின்றாற், வந்த, இலக்கியங்கள், தோற்றும், மதனில்