சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
அறிவாய் அகில காரணமாய் அநந்தா நந்த மாய்அரு வாய்ச், செறிவாய் எங்கும் நித்தமாய்த் திகழந்த சத்தாய்ச் சுத்தமாய்க், குறிதான் குணங்க ளொன்றின்றிக் கூறும் வேதம் தனக்களவாய்ப், பிறியா அநுபூ திகந்தனக்காய் நின்ற தந்தப் பிரமந்தான். |
221 |
ஒன்றாம் இரவி பலபாண்டத்(து) உண்டாம் உதகத் தங்கங்கே, நின்றாற் போல உடல்தோறும் நிகழ்ந்து நிற்கும் பொருள் மேற்கண், சென்றாற் போலப் புலன்களுக்குஞ் சிந்தை தனக்குந் தெரிவரிதாம், என்றால் காட்சி முதலாய இருமூன் றளவைக் கெட்டாதால். |
222 |
இருளில் பழுதை அரவெனவே இசைந்து நிற்கும் இருங்கதிர்கள், அருளப் பழுதை மெய்யாகி அரவும் பொய்யாம் அதுவேபோல், மருளில் சகமுஞ சத்தாகி மருவித் தோன்றும் மாசில்லாத் தெருளில் சித்தே சத்தாகும் பித்தாம் சகத்தின் செயலெல்லாம். |
223 |
உலகந் தானும் திருவசநத் துண்டாம் இன்றேல் உதியாது நிலவி யுண்டேல் அழியாது நிற்ப தாகும் மித்தையால் இலகு சுத்தி கனல்சேர இன்றாம் வௌ¢ளி நின்றதாம் குலவு சகமும் அவிகாரம் பரமார்த் தத்தில் கொள்ளாதால். |
224 |
தாங்கும் உலகுக் குபாதாநம் சத்தாம் சிலம்பி நூல்தன்பால், வாங்கி வைத்துக் காப்பதுபோல் வையமெல்லாம் தன்பக்கல், ஓங்க உதிப்பித் துளதாக்கி நிறுத்தி ஒடுக்கத் திலதாக்கும், ஆங்கு வந்த வாறதனால் சத்தாம் சகத்தின் அமைவெல்லாம். |
225 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், சகத்தின், சத்தாம், நிற்கும், இலக்கியங்கள், பழுதை