சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நெல்லில் பொரியா வதுநீ டழலில் சொல்லில் பொருளொன் றொடுதொக் கிடலால் கல்வித் திறமாம் உரைகாட் சியினால் மல்லற் பொருள்சா லவளந் தருமே. |
216 |
முன்கண் டபொருள் பெயரா தலினால் பின்கண் டபிழம் புணரும் பெயரால் நன்கண் டபொருட் கொருநா சமதின்(று) என்கண் டனைகா ரணமின் றழிவே. |
217 |
பொருள்இந் திரியம் உணர்வோ டுபுமான் இருளின் றியிடும் ஔ¤இத் தனையும் மருவும் பொழுதில் வருஞா னமதின் ஒருவும் பெயர்அர்த் தம்உதித் திடுமே. |
218 |
அர்த்தம் தௌ¤தற் கொளியா னதுபோல் சத்தம் பொருள்தான் அறிதற் குளதாம் நித்தம் அதுவன் றுரைநின் றழியும் சித்தன் ஒருவன் உரைசெய் தனனே. |
219 |
11. மாயாவாதி மதம் (220 - 252)
நானே பிரமம் என்றுரைத்து ஞாலம் பேய்த்தே ரெனஎண்ணி, ஊனே புகுந்து நின்றுயிர்கட் குபதே சங்கள் உரைத்துவரும், மானா மதிகே டனுமாய மாயா வாதி பேயாகித், தானே உரைக்கும் அந்நூலின் உண்மை தன்னைச் சாற்றுவாம். |
220 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், சித்தியார், இலக்கியங்கள்