சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பிரபாகரன் மத மறுதலை
வேறுபலந் தருவதுதான் வினையென்று வேதங்கள் கூறவோர் அபூர்வந்தான் கொடுக்குமெனக் கொண்டவுரை மாறுதரு மறையோடு முன்பின்றி வந்ததால் தேறியவிண் பூமுடிமேற் சேர்ந்துமணந் திகழ்ந்ததுவாம். |
206 |
ஆநந்தம் கதியென்ன அறிவழிகை வீடென்கை ஊனம்பின் உணர்விழந்தோர்க் குளதாகும் உயர்முத்தி தானிங்குச் சிவப்பொழியத் தழல்நிற்கு மாறில்லை ஞானங்கெட் டுயிர்நிற்கும் எனுமுரைதான் நண்ணாதால். |
207 |
10. சத்தப் பிரமவாதி மதம் (208 - 219)
உரையா னதுமை யலினால் உலகாம் புரையோ ருணரும் பொருள்பொய் யிதனை விரையா துணரும் அதுவீ டெனவே வரையா துரைவா திவகுத் தனனே. |
208 |
பரிணா மம்விவர்த் தநம்மா யம்அதில் தருமாம் உலகுள் ளதுசத் தமதே பொருளா வதுசொல் நலம்அல் லவெனில் மருவா துபொருட் டிறமற் றிலையே. |
209 |
பூமா வெனவே உரையும் பொருளும் ஆமாம் பொருளொன் றில்அணைந் திலதால் நாம்ஆ தரவெய் துசொல்நன் கருவாய்த் தாமாம் பொருள்நெற் பொரிதா னெனவே. |
210 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், சித்தியார், இலக்கியங்கள்