சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நிறைவெங்கு மாகில்உயிர் நெறிநின்று போய்வருதல் அணைவின்ற தாம் உடலிலே, குறைவின்றெ லாமும்உள குடகந்த மாகில் அவை விடநின்ற வாறு குறியா, உறைகின்ற மாதவர்கள் உடனின்று போய்வறிதொர் உடல்கொண்டு மீள்வ துணராய், மறைதந்த வாய்மைதனில் நிறைவின்றி யேயுலகின் மலைகின்ற தாலுன் உரையே. |
201 |
அழிகின்ற தால்வினைகள் ஆகின்ற வாறெனெர வது மங்கி யான பரிசேல், ஒழிவின்றி ஓதநமும் அறவுண்ண நாம் வினைகள் உறுகின்ற வாறதெனலாம், கழிகின்ற தாலறிவு வினைதந்தி டாவினைஞர் கருமங்கள் நாடி யுறுவோர், பழுதின்றி யேஉதவும் அதுபண்ப தாகஅருள் பரமன்க ணாகும் வினையே. |
202 |
கருமங்கள் ஞானமது வுடன்நின்ற லல்மருவு கதிதங்க லாகு மெனின்நீ, தரும் அங்க ராகமுதல் அவைதங்க மேலறிவ தவிரும்பின் வீடும் அணையா, பொருள் நின்று தேடிவரு பயன் உண்டு போவினை புரிகின்ற வாற தெனவே, திருநின்ற போகம் வளர் அவிசென்று மேவியது செலவுண்டு சூழவ செயலே. |
203 |
9. பிரபாகரன் மதம் (204 - 207)
அருந்தவனாம் சைமினிபண் டாரணநூல் ஆய்ந்தானாய்த் யூ¤ருந்தும்உல கிரிற்கொண்டு செப்பியநூல் திறமதனைப் பரிந்துபிர பாகரன்பட் டாசானில் வேறாகிப் புரிந்துரைசெய் நெறியதனைப் புவனிமிசைப் புகன்றிடுவாம். |
204 |
அருஞ்செயலின் அபாவத்தே அபூர்வமெனும் அது தோன்றித், தருஞ்செயல்நின் றழியில்பின் பலிப்பிப்ப தாகுமது, வருஞ்செயல்ஒன் றின்றியே மண்சிலைபோ லாமுத்தித், தருஞசெயலீ தெனவுணர்ந்து தாரணிமேல் அவன் சாற்றும். |
205 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், சித்தியார், கருமங்கள், இலக்கியங்கள்