சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நூற்கருத்து
இறைவனையும் இறைவனால் இயம்பு நூலும் முறைமைகளும் பெத்தமொடு முத்தி யெல்லா சிறையுலவும் புனல்நிலவித் தோன்றும் பேய்த்தேர்ச் துறைபலவுங் கடாவிடையாற் சொல்லிப் போக்கித் |
11 |
1. உலகாயுதன் மதம் (12 -63)
இந்திர புரோகிதன் இயம்பும்ஒரு நூலின் தந்திர மெனாதறிவி னோட்ருளி லாமல் சந்தணை புயத்துமண மாலைகள் தயங்க உந்தியுல கத்திலுல காயத னுரைப்பான். |
12 |
ஈண்டளவை காட்சிமன மாதிஇரு மூன்றாய் வேண்டும்அனு மானமுத லானபல வேண்டா பூண்டபொருள் பூதமவை புகழ்கடின சீதந் தீண்டரிய வெம்மைசல னத்தினொடு சேர்வே. |
13 |
சாற்றுபெய ரானவை தலம்புனல் கனற்பின் காற்றுமென லாம்இவை கலந்தகுண மோதின் நாற்றம்இர தம்உருவம் நற்பரிச மாகும் போற்றுமிவை நித்தஇயல் பாமிவை புணர்ப்பே. |
14 |
ஒத்துறு புணர்ச்சியின் உருக்கள்பல வாகும் வைத்துறு கடாதிபல மண்ணின்வரு மாபோற் புத்திகுண நற்பொறி புலன்களிவை யெல்லாம் இத்தில்வரும் நீரினில் எழுங்குமிழி ஒத்தே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், சித்தியார், இலக்கியங்கள்