சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
செய்தியும் நெறியும் மேவுந் தேவரும் பொருளும் எல்லாம் எய்திய பன்மை யாலே ஓரியல் பியம்பா தாகும் ஐயமில் காலம் மூன்றும் அறிந்தபின் நெஞ்ச கத்தாய் மெய்யதாய் வந்து தோன்றி விளங்கிடும் வேத நூலே. |
186 |
தப்பிலா வாகுந் தாது பிரத்தியந் தன்னி னோடே ஒப்பிலா தாம்பி ராதி பதிகமாம் உறுப்புங் கொண்டு செம்பபுமாம் வேதம் சொன்ன விதிப்படி செய்யச் சேம வைப்பதாம் வீடு பாசம் மருவலாம் ஒருவ லாமே. |
187 |
போக்கொடு வரவு காலம் ஒன்றினில் புணர்வ தின்றி ஆக்கவே றொரவ ரின்றி அநாதியாய் அணுக்க ளாகி நீக்கிடா வினையிற் கூடி நிலமுத லாக நீடி ஊக்கமா ருலகம் என்றும் உள்ளதென் றுரைக்க லாமே. |
188 |
நித்தமாய் எங்கு முண்டாய் நீடுயிர் அறிவு தானாய்ப் புத்திதான் ஆதி யாய கருவியின் புறத்த தாகிச் சுத்தமாய் அருவ மாகித் தொல்லைவல் வினையின் தன்மைக்(கு) ஒத்ததோர் உருவம் பற்றிப் புலன்வழி உணர்ந்து நிற்கும். |
189 |
செயல்தரு வினைகள் மாய்ந்து சிந்தையிற் சேர்ந்து நின்று பயனொடு பலியா நிற்கும் பலாலமும் தழையு மெல்லாம் வயல்தனின் மருவி நாசம் வந்தபின் பலத்தை வந்திங்(கு) இயல்பொருந் தந்தாற் போல என்றும்பின் இயம்பு கின்றான். |
190 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், நிற்கும், லாமே, இலக்கியங்கள், காலம்