சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
8. பட்டாசாரியன் மதம் (181 - 203)
வேதமே யோதி நாதன் இலையென்று விண்ணில் ஏறச் சேதமாங் கன்மஞ் செய்யச் சைமினி செப்பும் நூலின் நீதியே கொண்டு பட்டா சாரியன் நிகழ்த்தும் நீர்மை ஓதநீர் ஞாலத் துள்ளே உள்ளவா றுரைக்க லுற்றாம். |
181 |
உற்றிடுங் காம மாதி குணங்கள்தாம் உயிர்கட் குண்டாம் மற்றிவை தருமே யாகின் மறைமொழி வாய்மை யின்றாம் கற்றநூல் அளவாற் போதம் கலப்பது கல்வி யின்றேல் பெற்றிடும் மழவு மூங்கை என்னவே பேச லாமே. |
182 |
உண்டொரு கடவுள் வேதம் உரைத்திட உயிரின் தன்மை கொண்டவன் அல்லன் என்றுங் கூறிடின் உருவங் கூடில் பண்டைய உயிரே யாகும படித்தநூ லளவு ஞானம் கண்டிடும் உருவ மின்றேல் கருதுவ தில்லை என்றான். |
183 |
தேவரும் முனிவர் தாமும் சித்தரும் நரரும் மற்றும் யாவரும் உரைப்பர் வேதம் இயம்பினர் இன்ன ரென்னப் போவதன் றென்று நாளும் பரம்பரை புகல்வ தாகும் கூவல்நி ரென்னில் கொள்ளேம் மறுமையைக் குறித்த லாலே. |
184 |
உன்னிய அங்க மாறும் மூன்றுப வேதந் தானும் தன்னுளே அடக்கி வேறு தங்கிடா வகையைச் சார்ந்து முன்னமோர் தோற்ற மின்றி முடிவின்றி நித்த மாகி மன்னியோர் இயல்பே யாகி வழங்கிடும் மறைய தென்றான். |
185 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், சித்தியார், வேதம், இலக்கியங்கள்