சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நீதியா நித்த கன்மம் நிகழ்த்திடச் சுபத்தை நீங்கார் தீதிலா இச்சா கன்மஞ் செந்தழல் ஓம்பிச் செய்ய ஏதுதான் வேண்டிற் றெல்லாம் எய்தலாஞ் சோம யாகம் ஆதிதான் ஆசை வீசி அமைத்திட வீட தாமே. |
191 |
கருதிய கன்மம் ஞானம் இரண்டுங்கா லாகக் கொண்டு மருவிட லாகும் வீடு மதிதனை மதித்துச் செய்தி ஒருவிடில் பதித னாகும் பதிதனைக் கதியின் உய்க்கத் தருவதோர் நெறிதான் இல்லை என்னவுஞ் சாற்றி னானே. |
192 |
பசுப்படுத்(து) யாகம் பண்ணப் புண்ணியம் ஆவ தென்று வசிப்பினான் மறைகள் சொன்ன வழக்கினால் வாய்மை யாக நசிப்பிலா மந்தி ரங்கள் நவிற்றலின் இன்ப மாகும் பசிப்புளான் ஒருவன் உண்ணப் பசியது தீர்ந்த பண்பே. |
193 |
பட்டாசாரியன் மத மறுதலை
வேதஞ் சுயம்புவென வேதந்த வாய்மொழியில் வேறும் பிரமாண முளதேல், நீதந்து காணிங்கு மாதுங்க பாரதமும் நேர்கண்ட தாகும் அதுபோல், ஓதுஞ் சொலாய்வருத லானுங்க டாதிபட மோவந்தி டாஒருவரா, லேதந்த தாமறைக ளாய்வந்த வாய்மொழியும் வேறிந்து சேக ரனதே. |
194 |
உரைதந்தி டானஒருவன் எனிலிந்த வானினிடை ஒலி கொண்டு மேவி உளதாம், புரைதந்த வாம்மறைகள் அபிவெஞ்ச மாயொளிர்கை பொருள்தந்த தீப மதுவேல், வரை தந்த தாலில்வுரை கபிலன்சொ லாகுமது மறைகின்ற வாறும் வரவும், விரைவின்சொ லாயிதனை யெதுகொண்டு மேவுவது விடைகொண்ட தாலுன் உரையே. |
195 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், கொண்டு, யாகம், இலக்கியங்கள், கன்மம்