சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
வரம்பிலா அறிவன் ஆதி வைத்தநூற் பொருள்கள் தாமும் நிரம்பவே அணுக்கள் ஐந்து நிலம்புனல் தீகால் சீவன் பரந்திவை நின்ற பான்மை பாரது கடினம் சீதம் தரும்புனல் சுடும்தீ வாயுச் சலித்திடும் உயிர்போதத் தாம். |
166 |
பார்புனல் பரக்கும் கீழ்மேல் படர்ந்திடும் தேயு வாயுச் சேர்வது விலங்கின் உள்ளம் அவற்றொடும் சேரும் வேறு சார்வது பெற்ற போது சார்ந்தஅப் பொருளின் தன்மை நேர்வது மாகி நிற்கும் இதுபொருள் நிகழ்த்து மாறே. |
167 |
உணர்தரா அணுக்கள் நான்கும் ஒன்றுகெட் டொன்ற தாகர புணர்தரா ஒன்றில் புக்கொன் றாயினும் பொருந்தி வாழும் அணைதரா புதிய வந்திங் கழிதரா பழைய வான இணைதரா ஒன்றொன் றாகி மாறுதல் ஒன்றும் இன்றே. |
168 |
கொண்டுமுன் விரித்தல் நீட்டல் குறுக்குதல் குவித்தல் ஊன்றல், உண்டுதின் றுலர்த்தல் மீட்டல் உடைத்திடல் ஒன்றும் ஒண்ணா, விண்டுபின் புறம்பும் போகும் வேறுநின் றுள்ளு மேவும், பண்டுமின் றென்றும் எங்கும் பரந்தொரு தன்மைப் பாலே. |
169 |
கண்ணினில் காண வொண்ணா சனித்தந்தக் கன்மத் தாலே நண்ணிடும் உருக்க ளாகி நின்றபின் நரரோ காண்பார் விண்ணினில் தேவர் காண்பர் ஓரணு மிக்க நான்காய் எண்ணிய பொருள்க ளெல்லாம் இசைவதென் றியம்புமின்னே. |
170 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், ஒன்றும், வாயுச், இலக்கியங்கள், அணுக்கள்