சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஆறு காரி யங்கள்மாற வேத வங்க ளாமெனின் மாறி வாணி கஞ்செயா திருக்க வந்தி டாதனம் ஈறி லாத வூழதென்னின் எங்கு முள்ள தூழதே பேறு காரி யம்விடப் பிறப்ப தில்லை பேசிலே. |
161 |
உடல்வ ருந்தல் மாதவஙகள் உறுதி யென்று ரைத்திடில் படவ ருந்து நோயினோர்கள் படர்வர் பொன்னெ யில்எனாய் திடவே ருந்த இன்பம்இச்சை செய்தல் செய்தியேல் கெடஅரிந்தி டாய்உன் நாசி கேடில் இன்பம் உன்னியே. |
162 |
பூர்வ கன்மம் அற்றிடப் புசித்த பின்பு பொன்னெயில் நேர்வ தென்னின் அக்கன் மத்து நிச்சய மிலாமையில் தீர்வ தின்மை தீரியின்வாயில் சேர்வ தின்மை தெண்கடல் நீர்வ றந்த பின்புபூஞை மீன ருந்த நின்றதே. |
163 |
கூறு கூவல் மன்னும்அக் குடம் குறித்து நீள்கரை ஏற லுற்ற தன்மை நீ ஒருத்த ரின்றி ஏறுதல் வேறொ ருத்தன் அக்குடத்தை மீது நின்றெ டுக்கவே ஏற லுற்ற தன்மையில் சிவன்தி றத்து நின்றிடே. |
164 |
7. ஆசீவகன் மதம் (165 -180)
என்உயி ரதற்குப் போல எவர்க்கும்ஒத் திருப்பன் என்று தன்னுயிர் வருந்தத் தானும் தலையினைப் பறித்துப் பார்மேல் மன்உயிர் எவற்றி னுக்கும் வருந்தவே அறங்கள் சொல்லும் அன்னதோர் வாய்மை ஆசீ வகன்அம ணர்களிற் கூறும். |
165 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், தின்மை, லுற்ற, காரி, இலக்கியங்கள், ருந்த