சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஒன்றினை ஒருவி மூன்றங் குற்றிடா திரண்டு விட்டு நின்றிடா திரண்டு கூடும் நெறிநிலம் நான்கு நீர்மூன்(று) இன்றிரண் டழல்கா லொன்றாய் இசைந்திடும் பூமி யிவ்வா றென்றுநீர் தீகா லாகி ஈண்டுவ தென்றி யம்பும். |
171 |
வெண்மைநன் பொன்மை செம்மை நீல்கழி வெண்மை பச்சை உண்மையிவ் வாறின் உள்ளும் கழிவெண்மை ஓங்கு வீட்டின் வண்மைய தாகச் சேரும் மற்றவை உருவம் பற்றி உண்மையவ் வொட்டுத்தீட்டுக் கலப்பினில் உணரும் என்றான். |
172 |
பேறிழ விடையூ றின்பம் பிரிவிலா திருக்கை மற்றும் வேறொரு நாட்டிற் சேறல் விளைந்திடு மூப்புச் சாதல் கூறிய எட்டும் முன்னே கருவினுட் கொண்ட தாகும் தேறி ஊழிற் பட்டுச் செல்வதிவ் வுலகம் என்றான். |
173 |
புண்ணிய பாவம் என்னும் இரண்டணுப் பொருந்த வைத்தே எண்ணிய இவற்றி னோடும் ஏழென எங்க ளோடு நண்ணிய ஒருவன் கூறும் ஞானமிவ் வாற தென்று கண்ணிய கருத்தி னோர்கள் கதியினைக் காண்பர் என்றான். |
174 |
ஆசீவகன் மத மறுதலை
வாராநெறி வீடானயின் மண்மேல் அவன் வந்து தாராமையின் நூலானது தானோஉள தின்றாம் சேராமையில் அணுவானவை ஐந்தும்ஒரு தேயத்(து) ஓரானொரு காலத்தினில் ஒன்றாமுணர் வின்றாம். |
175 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், என்றான், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, பரபக்கம், சித்தியார், இலக்கியங்கள், திரண்டு