சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
இன்ப பூமி சேரிகலில் நாதன் இவ்வி ருநிலத் துன்பம்அங் குணர்ந்தி டாமை இங்கு வந்த சொல்லிடான் இன்ப பூமி யில்இருந் திருந்தி யாவும் எய்திடில் துன்ப பூமி யாமுணர்ந்து சொல்ல வல்ல தில்லையே. |
156 |
நிறைந்து காய மோடு சீவன் நின்ற தாகில் இவ்வுடல் குறைந்த போது தானும் இத்தொ டொக்கவே குறைந்திடும் இறந்து போகும் இக்கடம் இறந்த போது நீர்குடத்(து) உறைந்து டைந்தி டக்குடம் உலர்ந்த வாற தொக்குமே. |
157 |
கண்டநூல் தருந்தன் மாத்தி காய மோட தன்மமும் உண்டு மீது கீழ்உலாவி உற்று நின்றி டப்பொருள் கொண்ட தென்னில் அத்தமிவ் விரண்டு தன்மை கூடிடா வண்டு புட்கள் போலெனின் வழங்கி டாக ணத்திலே. |
158 |
நீடு பாவ புண்ணி யங்க ளால்நிரய வானகம் கூடு வேர்கள் இன்று நின்று கூட்டு வோர்கள் இன்மையின் ஓடு மாக ணைத்தி றத்தின் உற்றவா றுரைத்தியேல் வீடு மாக ணைக்கு நாடும் வில்லி போல வேண்டுமே. |
159 |
ஏண தொன்று புற்கலத்தின் எய்து மென்னின் நாசமே காண லாகும் அக்கடம் கழிந்த தன்மை இல்லவை பூண வேண்டும் மேலுறும் பொருத்த மின்மை யொன்றினின் மாணவே அணுப்பொருள் நிகண்ட வாதி வைத்ததே. |
160 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், பூமி, சாத்திரங்கள், சிவஞான, பரபக்கம், சித்தாந்த, தன்மை, போது, இன்ப, இலக்கியங்கள்