சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நிகண்டவாதி மத மறுதலை
அருகனுக் கனந்த ஞான மாதி ஆதி யாகவே பெருக நிற்றல் சீதம்மா மதிக்க டைந்த பெற்றியேல் ஒருவும் இட்ட ஒப்பவன் னுயிர்த்தி றத்தி னுள்ளபின் மருவு மிக்க குற்றம்மேல் அறத்தின் மன்னி னானெனில். |
151 |
அறத்தின் மன்னு வித்தவன் ஒருத்த னாய்அவன் அறத் திறத்தி னிற்றல் மற்றொருத்த னால்வி ளைந்த செய்தியாம் மறத்தின் அற்ற வர்க்கெலாம் வணக்கம் உன்இறைக்குமேற் பிறக்குமிங் கவத்தை கொண்ட தாரை யின்று பேசிடே. |
152 |
கருவிதன் தொடக்கொ ழிந்து கண்டு வாழு மென்றியேல் உருவு கொண்டு நின்ற தென்னில் உண்டுதான் மநாதிகள் ஒருவி நின்ற தென்னில் அத்த மொன்றையும் உணர்ந்திடான் பொருள்தெ ரிந்து போகை கால மொன்றிலே புணர்ந்திடான். |
153 |
ஆர்வ கோப மானவை அடைந்தொ றுப்ப வர்க்கெலாம் சேர்வ தின்மை செப்பில்இன்று சீவன் மேவு காயமால் ஒரு மன்னர் போலவே உயிர்க்க ளித்த லென்றியேல் ஏர்கொள் பொன்எ யிலிடத் திருத்தல் பெற்ற தென்கொலோ. |
154 |
சொல்ல தொன்று கொண்டிகலின் ஆத்தன் நாடவேசொலின் இல்லை யாம் மநாதிதான் இயம்பு மாற தெங்ஙனே நல்ல வாம் மநாதிதான் அவர்க்கு நாட வேயிலை ஒல்லை ஊமர் ஊமருக் குரைத்த வாற தொக்குமே. |
155 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, பரபக்கம், தென்னில், மநாதிதான், நின்ற, இலக்கியங்கள், அறத்தின், வர்க்கெலாம்