சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பசித்தல் தாகபய செற்ற மோடுவகை மோக சிந்தனை பழித்தனோய், நசித்தல் வேர்வினொடு கேத மோடுமதம் வேண்ட லீண்டதி சயித்தலும், புசிப்பு வந்திடு பிறப்பு றக்க மிவை விட்டொ ரண்ணகுண பூதனாய், வசித்த வன்னுலகின் மேலி ருந்தொருசொல் இகல னுக்கருளும் என்றனன். |
146 |
அந்த வாய்மொழியி னால்அவன்சரண மாதி யோகமுதலானநூல், இந்த மாநிலம் மயங்கி டாதவகை இங்கி யம்பினன் இதப்பொருள், வந்த காலமுயிர் தம் தன்மிஅறம் மற்றும் விண்மருவு புற்கலம், பந்தம் வீட்டினொ டநாதியா யிவை படைப்ப தின்றியுள பத்துமே. |
147 |
நிற்ற லோடுதலை போதல் அன்மையை நிகழ்த்து நீடுவேதி ரேகமும், உற்ற தாம்இவை கணத்தி லேமருவி உள்ள வாபுரியு மாறுதான், கற்ற காலமள வெய்தி வாழுமுயிர் காய மேவிநிறை வானதே, பெற்று வேறுவரு தன்மை நேரறிவு பெற்ற தாகியுள பேசிலே. |
148 |
பரந்து மீதுதரு மாத்தி காயம்அழி வித்(து) அநித்தமது பண்ணிடும், நிரந்து கீழதரு மாத்தி காயமது நித்த மாய்மிக நிறுத்திடும், புரந்த புண்ணிய மிதற்கு நன்மைபுகல் பாவ மானவது தீமையே, தரும்பொ ருட்கிடம தாகும் வானமிகு புற்க லன்களவை சாற்றுவாம். |
149 |
ஏணும் ஒன்றுடைய வாகி எங்கும்அணு வாய்இரும்புகல் மரங்களும், பூணும் அங்குருவெ லாமு மாகுமிவை புற்க லப்பொருள்கள் என்னலாம், காணும் அங்கறு வகைத்தொ ழில்களவை கட்டு விட்டநெறி கன்மமேல், மாண நின்றுவரு மாறி மாறிமுன் வகைந்த துண்டுவிட மாட்சியே. |
150 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், புற்க, இலக்கியங்கள், மாத்தி