சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
5. வைபாடிகன் மதம் (141 -142 )
அரிசனம் நூறு கூட வருணம்வந் தெழுந்தாற் போல விரிசகம் பொருள்கள் ஞானம் விரவிட மேவித் தோன்றும் தெரிசன மிதுவே யென்று தௌ¤ந்திடும் தேரர் வீடு பரிவொடும் அடைவீ ரென்று பகரும்வை பாடி கன்றான். |
141 |
வைபாடிகன் மத மறுதலை
பொருளது புறம்ப தாகும் போதம்அந் தரம தாகும் தெருளிடின் இரண்டுஞ் சென்று சேர்ந்திடு மாற தின்றாம் அருவுணர் உருவ ஞேய மாதலி னாலுங் கூடா உருவரு வுடைய வைபா டிகற்கினி மாற்றம் இன்றே. |
142 |
6. நிகண்டவாதி மதம் (143 -164 )
வாச மாமலர் அசோகு பேணிமறை நீதி யோடுமலை யுந்தவத்(து), ஆசை யாலுடை அகன்று மாசினை அடைந்தில் வாழ்தரும் அறத்தினில், பாச மானது தவிர்ந்து பண்டிபட வுண்டு பாயினொடு பீலிமேல், நேச மாயவை தரித்துளோர் களின் நிகண்ட வாதியை நிகழ்த்துவாம். |
143 |
ஈறி லாதன அநந்த ஞானமுதல் எண்கு ணங்களெனும் ஒண்குணம், மாறி லாதமதி மேவு சீதமென மன்னி வானவர் வணங்கவே, வேறு லாவுகுண ஞான ஆவரணி யாதி எட்டினையும் விட்டசீர், ஏறு பான்மையுடை நீடு வாழ்அருகன் எங்க ளுக்கிறைவன் என்றனன். |
144 |
கருவி கண்படு தொடக்கொ ழிந்துவரு கால மூன்றின் நிகழ் காரியம், பெருக நின்றொரு கணத்தி லேஉணர் பெருந்த வக்கடவுள் பீடினால், மருவி நின்றுவழி பட்ட வர்க்கும்மலை வுற்ற வர்க்கும்மனம் ஒத்திடும், குரிசி லெங்களிறை யென்று பின்னும்நிகழ் குற்ற மின்மையது கூறுவான். |
145 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், யென்று, தாகும், வைபாடிகன், இலக்கியங்கள், மதம்