சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
யோகாசாரன் மத மறுதலை
போதமுந் தவிர வேறோர் வாதனை புகன்றாய் போதம் வாதனை இரண்டுண் டென்னாய் போதவா தனையும் என்னிற் காதலாற் பொருளி னோடு கலந்தபின் எழுங்க ருத்தாம் வாதனை கனவு கண்ட பொருளின்மேல் வருங்க கருத்தே. |
136 |
அறிவதே பொருள தாயின் அகம்சடம் என்ன வேண்டும் பிறிபொரு ளாகும் பேதித் திதம்பிர பஞ்ச மென்னில் உறுபொருள் உருவந் தோய்ந்தால் உணர்வு மவ்வுருவாய் நிற்கும். |
137 |
4. மாத்தியமிகன் மதம் (138 -140 )
அவயவம் பொருளாய்த் தோன்றும் அவயவம் ஒழிந்தாற் பின்னை, இவைபொரு ளென்ன வேறொன் றிலாமையாற் பொருள்கள் இன்றாம், அவைபொருள் இலாமை யாலே அறிவுமின் றாகு மென்று, நவைதரு மொழியி னாலே நவிலுமாத் தியமி கன்றான். |
138 |
மாத்தியமிகன் மத மறுதலை
கடத்தினில் அவயவங்கள் படத்தினில் புகாமற் காத்தும், படத்தினில் அவயவங்கள் கடத்தினிற் புகாமற் கொண்டும், இத்தினில் நிற்கும் ஆகும் அவயவி இரண்டுங் கூடி, உடைத்தொரு பொருளுண் டாகப் பொருளுமுண் டுணர்வும் உண்டே. |
139 |
கருவியும் ஔ¤யும் வேறு கருதிடுங் கருத்தும் நிற்கப் பொருள்புண ராமை யாலே போதம்வந் தெழுவ தின்றாம் மருவிடம் பொருளுண் டாக வந்தெழும் புந்தி யானால் பொருளுள தாகு மாகப் போதமும் உள்ள தாமே. |
140 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சாத்திரங்கள், வாதனை, சித்தியார், பரபக்கம், சித்தாந்த, அவயவங்கள், படத்தினில், புகாமற், பொருளுண், யாலே, மாத்தியமிகன், இலக்கியங்கள், மறுதலை, நிற்கும், அவயவம்