சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
உற்றெழு மரங்க ளாதி உயிரின்றிப் பூத ரூபம் பற்றியிப் பாரின் மீது பாங்கினாற் பலவு மாகிப் புற்றொடு மயிர்கொம் பாதி போலவே தோன்றி மாயும் மற்றுள யோனி கட்குப் பயனென வழங்கு மன்றே. |
91 |
கொண்றிட லாகா தென்றும் கொன்றவை கொண்டு நாளும் தின்றிட லாகு மண்ணோ டொத்திடும் செத்த வெல்லாம ஒன்றிய வாச மூட்டி உண்ணுநீர் வைத்த வர்க்கோ சென்றுநின் றுண்ட வர்க்கோ புண்ணியம் செப்பி டாயே. |
92 |
ஓங்கிய உருவ மோடும் வேதனை குறிப்பி னோடும் தாங்குபா வனைவிஞ் ஞானம் தாமிவை ஐந்துங் கூடிப் பாங்கினாற் சந்தா னத்திற் கெடுவது பந்த துக்கம் அங்கவை பொன்றக் கேடாய் அழிவது முத்தி யின்பம். |
93 |
அழித்திடும் அராக மாதி அகற்றிநல் லறங்கள் பூரித்(து) இழித்திடும் புலன்கள் போக்கி இன்பொடு துன்பம் வாட்டிப் பழித்திடாப் பழுதில் வாழ்க்கை எட்டையும் பாரித் தெல்லாம் ஒழித்திடு ஞான சீலம் சமாதியின் உறுதி யாமே. |
94 |
சௌத்திராந்திகன் மத மறுதலை
அனைத்தினையும் உணர்ந்தானெம் இறைவ அனைத்தினையும் அறிந்திடான் அளவி லாமை அனைத்தினையும் அளவிறந்த தென்ன வேண்டா அனைத்தினையும் அறியாது கணத்தில் தோன்றி |
95 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், அனைத்தினையும், நூல்கள், சிவஞான, சாத்திரங்கள், சித்தியார், பரபக்கம், சித்தாந்த, ஞானம், வர்க்கோ, இலக்கியங்கள், பாங்கினாற், தோன்றி, மன்றே