சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
இல்லது கருணை யாலே இயற்றினன் இறைவன் என்னில் கொல்லரி உழுவை நாகங் கூற்றமுங் கொண்டு தோற்ற வல்லவன் கருணை யென்னோ வலியினால் வேண்டிற் றெல்லாம் பல்கவே படைத்தா னாயிற் பித்தரைப் பணிந்தி டாயே. |
86 |
பெறுவதிங் கென்பபடத்துப் பெற்றது விளையாட் டென்னில் சிறுமழ விறைய தாகும் செய்திடும் கன்மத் தென்னின் உறுபெருங் கன்மஞ் செய்வோர் முன்புள ராவ ருண்மை அறிவுறின் ஞால மெல்லாம் அநாதியென் றறிந்தி டாயே. |
87 |
உருவொடு நின்றா னென்னின் உருவமுன் படைத்தார் வேண்டும் உருவவன் இச்சை யென்னில் உலகெலாம் இச்சை யாகும் உருவுல கத்து ளோர்கட் குறுவது கன்மா லென்னின் உருவுடை யோர்கட் கெல்லாம் உற்றது கன்மத் தாமே. |
88 |
அருவெனில் பவத்தி னின்றும் எடுத்திடான் ஆகா சம்போல் மருவினன் நிழல்போ லென்னின் மருவினோர்க் காகும்மாட்சி பெருகிய அறிவுண் டென்று பேசிடின் நேசத் தோடும் கருதிட உருவம் வேண்டும் இல்லையேற் கருத லின்றே. |
89 |
எங்கள்நூல் அநாதி யயக இறைவனுண் டென்னு மென்னின் உங்கள்நூல் உரைப்பா ரின்றி ஓதுவ தழகி தாகும் அங்கவன் தன்ஆஆ நூல்கொண் டறிந்தனம் அவனைக் கொண்டே இங்குநூல் அறிந்தோ மென்னில் ஈதோராச் சரிய மாமே. |
90 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், வேண்டும், இச்சை, லென்னின், கன்மத், இலக்கியங்கள், கருணை, டாயே, தாகும்