சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஈங்குவவன் செயற்கு வாரா இயம்பிய பொருள்க ளெல்லாம் தாங்குவான் உளதே யென்னில் தரித்திடா தருவ மாதல் ஓங்குவான் ஓசைக் ககதி யெனிலதங் குருவின் கூட்டம் நீங்குவா னின்றி எங்கும் நின்றதேல் எங்கு மின்றே. |
76 |
போதமுண் டுயிர்கட் கென்னில் வாயிலைம் புலனும் நூலும் ஆய்தலின் றொட்டுத் தீட்டுக் கலப்பினில் அறியு மென்னில் ஏதமுண் டிரவிற் பச்சை சிவப்புடன் ஏய்ந்த போது கேதநின் றென்னோ என்னும் ஐயமுன் கிடத்த லாலே. |
77 |
அறிந்திடா வாயி லின்றேல் அறிவின்றாம் ஐந்தும் பற்றி அறிந்திடும் அறிவுண் டென்னில் ஐந்தினும் அறிவொன் றாக அறிந்திட வேண்டும் சார்பின் அறிந்திடு மென்னில் உன்னை அறிந்திலோம் புத்த னென்றிங் கழகிது சொன்ன வாறே. |
78 |
ஞானஞே யங்க ளன்றி ஞாதிரு என்று சொல்ல ஆனதிங் கறிவேவ அன்றோ அன்றெனில் அவனி போலும் தாதிங் கறிவே என்னில் சமைந்திடு நன்ப ருப்புப் போனக மதற்குத் தானே கறியெனப் புகன்ற தாமே. |
79 |
உயிரினை அருவ தென்னில் உருவுடன் உற்று நில்லா(து) உயிரினை உருவ தென்னில் உடலினில் உடல டங்கா(து) உயிரினை அணுவ தென்னில் உடல்பல துவார மோடும் உயிரினை நித்த மென்னில் உணர்வுத யாந்த மின்றே. |
80 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், உயிரினை, நூல்கள், தென்னில், மென்னில், பரபக்கம், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், சித்தியார், இலக்கியங்கள், மின்றே