சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
காரண காரி யத்தின் தொடர்ச்சியாய்க் கால மூன்றின் சோர்வறத் தோன்றும் கெட்டு வழியென்கை தொடர்ச்சி யுண்மை ஓர்தரின் ஒருவ னேஎக் காலத்தம் உள்ளா னென்று தேர்வது தொடர்ச்சியின்மை வழக்கதாம் செப்புங்காலே. |
71 |
தோன்றிய பொருள்க ளெல்லாம் நாசமாம் என்று சொல்லும் மாற்றமுன் னுரைத்தல் மற்றை மிகுத்துரை வழக்கி னுண்மை போற்றிய பொருள்கண் கட்குப் போனது அஅ£ல்மு திர்ந்து வேற்றுமைப் பட்ட தென்கை மிகுத்துரை இல்வழக்கே. |
72 |
உள்வழக் கில்வ ழக்குள் ளதுசார்ந்த உள்வ ழக்கோ(டு) உள்ளது சார்ந்த இன்மை வழக்குடன் இன்மை சார்ந்த உள்வாக் கின்மை சார்ந்த இல்வழக் கென்றோ ராறாம் உள்வழக்குள துண்டென்கை முயற்கோடின் றில்வழக்கே. |
73 |
உணர்வுசார்ந் துணர்வு திக்கை யுள்ளது சார்ந்த வுண்மை உணர்வுபி னின்றா மென்கை யுள்ளது சார்ந்த இன்மை உணர்வுமுன் பின்றித் தோன்றல் இல்லது சார்ந்த வுண்மை உணரினில் லதுசா ரின்மை உள்ளங்கை உரோம நாணே. |
74 |
சொன்னநால் வகையு மின்றிச் சொல்லிடும் பொருள்க ளெல்லாம் என்னையோ அறிகி லோம்பித் தேறியோ வானம் ஆன்மா மன்னுகா லங்கடிக்கு மனமுடன் வாக்கி றந்திட்(டு) உன்னுமோர் இறையும் உண்டென் றுரைப்பது நித்த மன்றே. |
75 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சார்ந்த, நூல்கள், இன்மை, சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, பரபக்கம், சித்தியார், வுண்மை, யுள்ளது, இலக்கியங்கள், பொருள்க, ளெல்லாம், மிகுத்துரை