சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
மருவிய அளவை காட்சி மானமென் றிரண்டி வற்றறல் கருதிய பொருள்கள் ஞான ஞேயமாய்க் கணத்திற் பங்கம் வருமுரு அருவம் வீடு வழக்கென நான்க தாதித் தருமவை ஒறி ரண்டாய்த் தான்விரிந் தெட்டி னாமே. |
66 |
உருஇயல் பூத மோடங் குபாதாய ரூப மாகும் அருஇயல் சித்தம் கன்மம் என்றிரண் டாகும் வீட்டின் மருவியல் குற்றம் கந்த மெனவழங் கிடும்வ ழக்கின் இருஇயல் உள்ள தோடங் கில்லதாம் இயம்புங் காலே. |
67 |
மண்புனல் அனல்கால் பூதம் வலிகந்தம் இரதம் வன்னம் எண்டரும் உபாதா யம்தா னிவைஇரு நான்குங் கூடி உண்டொரு பொருளு ரூபம் உறுபுலன் உபாங்க மோடக் கண்டது சித்தம் கன்மம் நன்றுதீ தென்றட காணே. |
68 |
குற்றவீ டராக மாதி குணங்களைக் குறைதத லாகும் மற்றவீ டுருவ மாதி ஐந்தையு மாய்த் லாகும் சொற்றருந் தொகைதொ டர்ச்சி மிகுத்துரை யென்று மூன்றாய் உற்றிடும் வழக்கி ரண்டும் ஒன்றுமூன் றாகி ஆறாம். |
69 |
ஒருவனென் றோதப் பட்டான் உருவாதி ஐந்தும் கூடி வருபவ னென்று ரைத்தல் தொகையுண்மை வழக்க தாகும் உருவமங் காதி யாய ஐந்தையும் ஒருவன் இன்று தருவது தொகையினின்மை வழக்க தாஞ்சாற் றுங்காலே. |
70 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், லாகும், வழக்க, மாதி, இலக்கியங்கள், சித்தம், கன்மம், கூடி