சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
குரோத மேகுண மாயி ருந்தவர் சாந்தி நன்மை குறிக்கொளார் அராக மேயணை வார்க ளாசை அறுத்த இன்பம் அறிந்திடார் பராவு தேவர் பராவு தூய பராப ரன்அடி பற்றிநீ விராவு மெய்யில் விடாத இன்பம் விளைந்திடும் இதுமெய்ம்மையே. |
61 |
காம மாதி குணங்க ளைச்சுக மென்று கொண்டனை காதலால் தூம மாரழல் அங்கி சீத மலிந்த போது சுகந்தரும் நாம மார்தரு சீதம் வெம்மை நலிந்த பேபது தருஞ்சுகம் சேச மாகிய இன்ப மாமிகு தெய்வ நன்னெறி சேரவே. |
62 |
படிக்கு நூல்கள் சிவாக மம்பசு பாசமொடு பதித்திறம், எடுத்தி யம்புவ தீசன் வார்கழ லேத்தி டுந்தொழி லென்றுமே, விடுத்தி டும்பொருள் காம மாதிகள் வேண்டி டும் பொரு ளீண்டருள், முடித்து மும்மலம் விட்டு நின்மல னோடு நின்றிடன் முத்தியே. |
63 |
2. சௌத்திராந்திகன் மதம் (64-134)
நீதியார் வேத நூலின் நெறியலா அறங்கள் நாளும் ஓதியோர் ஐந்து சீலம் உடையராய் உடல மூடிப் போதிநீள் மரத்தின் மேவும் புத்தர்நால் வரினும் வைத்துச் சாதிதான் இலாத கொள்கைச் சௌத்திராந் திகன்முன் சாற்றும். |
64 |
முழுதுணர்ந் துலகிற் கோறல் முதற்செயல் முணிந்து மற்றும் பழுதிலா அருளி னாலே பரதுக்க துக்க னாதித் தொழுதுவா னவரும் போற்றத் தொல்பிட கங்க ளான வழுவிலா கமங்கள் சொன்ன மாதவன் நநத னாவான். |
65 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், பராவு, இலக்கியங்கள், இன்பம்