சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பூத மானவை காரி யங்கள் பொலிந்து மன்னி அழிந்திடும் ஆத லால்ஒரு நாதன் இங்குளன் என்ற றிந்துகொள் ஐயனே பேத மான கடாதி மண்ணினில் வந்த வாறு பிடித்திடில் போதி லாத குலால னால்வரு செய்கை யென்று குறிப்பரே. |
56 |
வேதன் நாரணன் ஆர ணம்மறி யாவி ழுப்பொருள் பேதைபால், தூத னாயிரு கால்ந டந்திடு தோழன் வன்னம செய் தொண்டனுக்(கு), ஆத லாலடி யார்க ளுக்கௌ¤ யான டிக்கம லங்கள்நீ, காத லாலணை ஈண்டன் வேண்டின இம்மை யேதருங் கண்டிடே. |
57 |
பொன்கு லாவு மணிக்க லன்கள் மலம்பு கில்கை பொருந்திடா, மின்கு லாம்இடை யார்கள் தாமுல கத்தின் வேட்கை விடும்பொருள், புன்பு லால்மல மூத்தி ராதி பொசிந்து நாறு புலைக்கலம், என்கொ லாமிவர் மேல்வி ழுந்த திவற்றின் என்பெற எண்ணியே. |
58 |
தோலி ரத்தம் இறைச்சி மேதை யெலும்பு மச்சை சுவேதநீ ராலெ டுத்த முடைக்கு ரம்பை அழுத்தி னோடு புழுக்குழாம் நூலொ ழுக்கிடு கோழை ஈரல் நுரைக்கு மூத்திர பாத்திரம் சேல டர்த்தகண் ணார்க ளென்பது தேர்ம லத்திரள் திண்ணமே. |
59 |
ஆசை யுற்றுழல் சூக ரங்கள் அசுத்த மேவி அளைந்துதின் றேசு கித்தன வாயி டுஞ்சுகம் ஏழை யோடுறும் இன்பம் நீ மாச தற்றொளிர் நித்த சுத்த வளந்த ருஞ்சுக வாரிகாண் ஈச னுக்கடி மைத்தி றத்தின் இசைந்து நாம்பெறும் இன்பமே. |
60 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், சித்தியார், இலக்கியங்கள்