சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
காணொ ணாகர ணங்க ளுக்குயிர் கண்டி டாமையின் இன்றெனில் காணு மோகடங் கண்ட கண்ணினைக் கண்டு நிற்பதுங் கண்ணதே காணொ ணாதுயிர் தானு மிப்படி கண்டி டுங்கர ணங்களைக் காணொ ணாகர ணங்க ளுக்குயி ருண்மை யாவதுங் கண்டிடே. |
51 |
அங்கி யானது தானு மொன்றை அணைந்து நின்று நிகழ்ந்திடும் பங்கி யாதுயிர் தானு மிப்படி பற்றி யல்லது நின்றிடா(து) எங்கு மார்தயி லத்தை யுண்டெழு தீப மான தெரிந்திடும் அங்க தாம்உடல் நின்று கன்மம் அருந்தி யாருயி ராவதே. |
52 |
அறிவு தானுட லத்தின் வேறது வாயி றந்து பிறந்திடின் அறிவு முன்புள திங்கு வந்தும் அறிந்தி டாமைய தின்றெனின் அறிவை யோகன வத்து நீநன வத்தை அன்று தரத்திருந் தறியு மவ்வறி வோம யட்ககறி வாத லாலறி யாதுகாண். |
53 |
இறந்தி டும்அறி வேபி றந்திடு மென்ப திங்கிசை யாதெனின், உறங்கி டும்பொழு தின்றி நின்றுணர் விங்கு தித்திடு மாறதோர், பிறந்த இவ்வுடல் போக வேறுடல் பின்பு வந்தமை பேசிடின், மறந்தி டுங்கன வத்தின் வேறு டல் வந்த வாறு மதித்திடே. |
54 |
கரணம் வாயு விடத்த டங்க அடங்கி வந்தெழு காரியம் மரண மான விடத்து மற்றிவை மாய்ந்து பின்பு வருஞ்செயல் கிரண மார்கலை கெட்டு திப்ப இறப்பி னோடு பிறப்பையும் தரணி யோர்கள் மதிக்கு ரைப்ப ருயிர்க்கு மிப்படி சாற்றிடே. |
55 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, மிப்படி, தானு, காணொ, சித்தியார், சித்தாந்த, பரபக்கம், சாத்திரங்கள், அறிவு, பின்பு, நின்று, கண்டி, இலக்கியங்கள், ணாகர, ணங்க