சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
23. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, அசத்தினுக்கு உணர்வு இன்று என்றது
ஏது: அதுதான் நிரூபிக்கில் இன்றாகலான்
உதாரணம்:
பேய்த்தேர் நீர் என்றுவரும் பேதைக்கு மற்று அணைந்த பேய்த்தேர் அசத்தாகும் பெற்றிமையின் --- வாய்த்து அதனைக் கண்டுணர்வார் இல்வழியின் காணும் அசத்தின்மை கண்டுணர்வார் இல்லது எனக் காண் | 41 |
24. மூன்றாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இருதிறன் அறிவு உளது இரண்டலா ஆன்மா என்றது.
ஏது: இவ்விரண்டனையும் அறிவதாய் உபதேசியாய் நின்ற அவ்வறிவு இரண்டன் பாலும் உளதாயுள்ள அதுவே அவ் ஆன்மாவாம் என்றது
உதாரணம்:
அரு உருவம் தான் அறிதல் ஆய் இழையாய் ஆன்மா அரு உருவம் அன்று ஆகும் உண்மை-- அரு உருவாய்த் தோன்றி உடன் நில்லாது தோன்றாது நில்லாது தோன்றல் மலர்மணம்போல் தொக்கு | 42 |
மயக்கமது உற்றும் மருந்தின் தெளிந்தும் பெயர்த்து உணர் நீ சத்து ஆகாய் பேசில்-- அசத்தும் அலை நீ அறிந்து செய்வினைகள் நீ அன்றி வேறு அசத்துத் தான் அறிந்து துய்யாமை தான் | 43 |
மெய்ஞானந் தன்னில் விளையாது அசத்தாதல் அஞ்ஞானம் உள்ளம் அணைதல்காண்--- மெய்ஞ்ஞானம் தானே உள அன்றே தண் கடல்நீர் உப்புப்போல் தானே உளம் உளவாய்த் தான் | 44 |
எட்டாம் சூத்திரம்
ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே |
என்பது சூத்திரம்
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், ஞானத்தினை உணரும் முறைமையினை உணர்த்துதல் நுதலிற்று
25: முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முன்செய் தவத்தால் ஞானம் நிகழும் என்றது
ஏது: மேற் சரியை கிரியா யோகங்களை செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக் கொடா ஆகலான்.
உதாரணம்:
தவம்செய்வார் என்றும் தவலோகம் சார்ந்து பவஞ் செய்து பற்று அறுப்பார் ஆகத் -- தவஞ் செய்த நற்சார்பில் வந்து உதித்து ஞானத்தை நண்ணுதலைக் கற்றார்சூழ் சொல்லுமாம் கண்டு | 45 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், என்றது, தான், நூல்கள், சிவஞானபோதம், மேற்கோள், உதாரணம், சாத்திரங்கள், அதிகரணம், சித்தாந்த, நில்லாது, தானே, சூத்திரம், அறிந்து, ஆன்மா, இலக்கியங்கள், பேய்த்தேர், கண்டுணர்வார், உருவம்