சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பசித்து உண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும் இசைத்து வருவினையில் இன்பம் -- இசைத்த இருவினை ஒப்பில் இறப்பில் தவத்தான் மருவுவன் ஆம் ஞானத்தை வந்து | 46 |
26. இரண்டாம் அதிகரணம்.
மேற்கோள்: இனி, இவ் ஆன்மாக்களுக்கு தமதுமுதல் தானே குருவுமாய் உணர்த்தும் என்றது.
ஏது: அவன் அன்னியம் இன்றிச் சைதன்னிய சொரூபியாய் நிற்றலான்.
உதாரணம்:
மெய்ஞ்ஞானம் தானே விளையும் விஞ்ஞானகலர்க்கு அஞ்ஞான அச்சகலர்க்கு அக்குருவாய் -- மெய்ஞ்ஞானம் பின்னுணர்த்தும் அன்றிப் பிரளயா கலருக்கு முன்னுணர்த்தும் தான் குருவாய் முன் | 47 |
அறிவிக்க அன்றி அறியா உளங்கள் செறியுமாம் முன்பின் குறைகள் --- நெறியில் குறையுடைய சொற்கொள்ளார் கொள்பவத்தின் வீடுஎன் குறைவில்சகன் சூழ்கொள் பவர்க்கு | 48 |
இல்லா முலைப்பாலும் கண்ணீரும் ஏந்திழைபால் நல்லாய் உளவாமால் நீர்நிழல்போல் -- இல்லா அருவாகி நின்றானை ஆரறிவார் தானே உருவாகித் தோன்றானேல் உற்று | 49 |
27: மூன்றாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இவ் ஆன்மாக்கள் ஐ உணர்வுகளால் மயங்கித் தம்மை உணரா என்றது.
ஏது: அவைதாம் பளிங்கில் இட்ட வன்னம்போல் காட்டிற்றைக் காட்டி நிற்றலான்.
உதாரணம்:
பன்நிறம் காட்டும் படிகம்போல் இந்திரியம் தன்னிறமே காட்டும் தகைநினைந்து-- பன்னிறத்துப் பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய்பொய்யா மெய் கண்டான் மெய்பொருட்குத் தைவமாம் வேறு | 50 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், தானே, சாத்திரங்கள், சிவஞானபோதம், சித்தாந்த, மெய்ஞ்ஞானம், காட்டும், உதாரணம், இல்லா, மேற்கோள், இலக்கியங்கள், அதிகரணம், என்றது, நிற்றலான்