சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
உணர்ப அசத்தாதல் ஒன்று உணராது ஒன்றை உணருநீ தான் உணராய் ஆயின் --- உணரும் உனில் தான் இரண்டாம் மெய்கண்டான் தன்னால் உணர்தலால் தான் இரண்டாய்க் காணான் தமி | 36 |
பாவகமேல் தான் அசத்தாம், பாவனா அதீதம் எனில் பாவகமாம் அன்றென்னில் பாழ் அதுவாம்-- பாவகத்தைப் பாவித்தல் தான் என்னில் பாவகமாம் தன்னருளால் பாவிப்பது பரம் இல் பாழ் | 37 |
அறிய இரண்டு அல்லன், ஆங்கு அறிவு தன்னால் அறியப் படான், அறிவின் உள்ளான் -- அறிவுக்குக் காட்டு ஆகி நின்றானைக் கண்ணறியா மெய்யென்னக் காட்டாது அறிவு அறிந்து கண்டு | 38 |
அதுவெனும் ஒன்றுஅன்று அதுவன்றி வேறே அதுவென்று அறி அறிவும் உண்டே--- அதுவென்று அறிய இரண்டல்லன் ஆங்கு அறிவுள் நிற்றல் அறியும் அறிவே சிவம் ஆம் | 39 |
உண்மை அதிகாரம்: சாதனாவியல்
ஏழாம் சூத்திரம்
யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின் சத்தே யறியாது அசத்துஇலது அறியா இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா |
என்பது சூத்திரம்
வார்த்திகப் பொழிப்பு:
கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று
22. முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, சத்தினிடத்து அசத்துப் பிரகாசியாது என்றது.
ஏது: மெய்யினிடத்துப் பொய் அப்பிரகாசமாய் நிற்றலான்.
உதாரணம்:
அன்னியம் இலாமை அரற்கு ஒன்று உணர்வு இன்றாம் அன்னியமிலான் அசத்தைக் காண்குவனேல்---- அன்னியமாக் காணான் அவன்முன், கதிர்முன் இருள்போல் மாணா அசத்து இன்மை மற்று | 40 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், தான், நூல்கள், சாத்திரங்கள், சிவஞானபோதம், சித்தாந்த, ஆங்கு, அறிவு, சூத்திரம், அறிய, அதுவென்று, தன்னால், இலக்கியங்கள், ஒன்று, காணான், பாவகமாம், பாழ்