சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
19. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இதுவும் தமது முதலாலே உணரும் என்றது.
ஏது: அவ் ஆன்மாத் தன்னாலே உணரும் இந்திரியங்களைப் போலத் தானும் தன்னை உணராது நிற்றலான்.
உதாரணம்:
மன்னுசிவன் சந்நிதியில் மற்று உலகம் சேட்டித்தது என்னும் மறையின் இயல்மறந்தாய்-- சொன்ன சிவன் கண்ணா உளம்வினையால் கண்டு அறிந்து நிற்கும்காண் எண்ணான் சிவன் அசத்தை இன்று | 31 |
வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது வெய்யோனை ஆகாத மீன்போல--- மெய்யவனில் கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனைக் கண்டு உடனாய் மன்னுதலைக் காண் | 32 |
அருளுண்டாம் ஈசற்கு அதுசத்தி அன்றே அருளும் அவன் அன்றி இல்லை-- அருளின்று அவன் அன்றே இல்லை அருட்கண்ணார் கண்ணுக்கு இரவிபோல் நிற்கும் அரன் ஏய்ந்து | 33 |
ஆறாம் சூத்திரம்
உணருரு அசத்து எனின் உணராது இன்மையின் இருதிறன் அல்லது சிவசத்தாம் என இரண்டு வகையின் இசைக்குமன் உலகே |
என்பது சூத்திரம்
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: சத்தும் அசத்தும் வரைசெய்து உணர்த்துதல் நுதலிற்று
20. முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, அறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத்து என்றது.
ஏது: அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்
உதாரணம்:
அசத்து அறியாய் கேள்நீ அறிவு அறிந்த எல்லாம் அசத்தாகும் மெய்கண்டான் ஆயின்-- அசத்துஅலாய்! நீரில் எழுத்தும் நிகழ் கனவும் பேய்த்தேரும் ஓரில் அவை இன்று ஆம் ஆறு ஒப்பு | 34 |
21. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இவ்விரண்டு தன்மையும் இன்றி வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற அதுவே சத்தாயுள்ள சிவன் என்றது
ஏது: பிரகாசத்தினுக்குப் பிரகாசிக்க வேண்டுவது இன்மையானும் அப்பிரகாசத்தினுக்குப் பிரகாசம் இன்மையானும்.
உதாரணம்:
எண்ணிய சத்தன்று அசத்தன்று ஆம் என்றால் என் கண்ணி உளது என்றல், மெய்கண்டான்- எண்ணி அறிய இரண்டு ஆம் அசத்து ஆதல் சத்தாம் அறிவு அறியா மெய்சிவந்தாள் ஆம் | 35 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், அசத்து, சிவஞானபோதம், என்றது, சிவன், மேற்கோள், உதாரணம், சாத்திரங்கள், சித்தாந்த, அதிகரணம், இல்லை, சூத்திரம், இரண்டு, இன்மையானும், மெய்கண்டான், அறிவு, அவன், இன்று, இரண்டாம், உணரும், உணராது, நிற்றலான், கண்டு, இலக்கியங்கள், அன்றே