சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
மூன்றாம் சூத்திரம்.
உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின் ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின் உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின் மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா |
என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், ஆன்மப் பிரகாசம் உணர்த்துதல் நுதலிற்று.
8. முதல் அதிகரணம்.
மேற்கோளும் ஏதுவும்: ஈண்டு , இலது என்றலின் ஆன்மா உளது என்றது.
பொழிப்புரை: எவற்றினையும் அன்று அன்று எனவிட்டு, ஆன்மா இலது என்று நிற்பது உளதாகலின் அதுவே அவ் வான்மாவாம் என்றது.
உதாரணம்:
அன்று அன்று எனநின்று அனைத்தும்விட்டு அஞ்செழுத்தாய் நின்றஒன்று உளதுஅதுவே நீ அனைத்தும்-- நின்றுஇன்று தர்ப்பணம்போல் காட்டலால் சார்மாயை நீயல்லை தற்பரமும் அல்லை தனி. | 16 |
9. இரண்டாம் அதிகரணம்
மேற்கோளும் ஏதுவும்: இனி, எனது உடல் என்றலின் ஆன்மா உளது என்றது
பொழிப்புரை: என்பதி என்மனை என்றாற்போல என்கை என்கால் என நிற்பது உளதாகலின் அதுவே அவ் வான்மாவாம் என்றது.
உதாரணம்:
எனதுஎன்ற மாட்டின் எனது அலாது என்னாது உனதலாது உன்கைகால் யாக்கை -- எனதென்றும் என்னறிவது என்றும் உரைத்துநீ நிற்றிகாண் உன்னில் அவை வேறாம் உணர். | 17 |
10. மூன்றாம் அதிகரணம்
மேற்கோளும் ஏதுவும்: இனி, ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது என்றது
பொழிப்புரை: ஐம்புலனாகிய சத்த பரிச ரூப ரச கந்தங்களை இந்திரியங்கள் ஒன்று அறிந்து ஒன்று அறியாமையின் இவ் ஐந்தினாலும் ஐம்பயனும் அறிவது உளதாகலின், அதுவே அவ் ஆன்மாவாம் என்றது.
உதாரணம்:
ஒன்று அறிந்தது ஒன்று அறியா தாகி உடல்மன்னி அன்றும் புலனாய அவ் அஞ்செழுத்தை-- ஒன்று அறிதல் உள்ளதே ஆகில் அதுநீ தனித்தனி கண்டு உள்ளல் அவை ஒன்றல்ல ஓர். | 18 |
11. நான்காம் அதிகரணம்
மேற்கோளும் ஏதுவும்: இனி, ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது என்றது.
பொழிப்புரை: நனவின்கண் கனவு காண்டாம் என்றும் கண்டிலம் என்று நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.
உதாரணம்:
அவ்வுடலின் நின்றுயிர்ப்ப ஐம்பொறிகள் தாம்கிடப்பச் செவ்விதின் அவ்வுடலிற் சென்று அடங்கி-- அவ்வுடலின் வேறொன்று கொண்டு விளையாடி மீண்டு அதனை மாறல், உடல் நீ அல்லை மற்று | 19 |
12. ஐந்தாம் அதிகரணம்
மேற்கோளும் ஏதுவும்: இனிக் கண்படில் உண்டிவினை இன்மையின் ஆன்மா உளது என்றது.
பொழிப்புரை: ஒடுங்கினவிடத்து இன்பத்துன்பஞ் சீவனம் பிரகிருத்திக்கு இன்மையின், ஒடுங்காதவிடத்து இன்பத்துன்பஞ் சீவியா நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.
உதாரணம்:
கண்டறியும் இவ்வுடலே காட்டு ஒடுங்கக் காணாதே உண்டிவினை இன்றி உயிர்த்தலால்-- கண்டறியும் உள்ளம்வேறு உண்டுஆய் ஒடுங்காது உடல்நண்ணில் உள்ளதாம் உண்டிவினை ஊன். | 20 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், என்றது, ஆன்மா, உளது, ஏதுவும், பொழிப்புரை, உளதாகலின், உதாரணம், அதுவே, மேற்கோளும், அதிகரணம், ஒன்று, அன்று, நூல்கள், நிற்பது, என்றலின், உண்டிவினை, சாத்திரங்கள், இன்மையின், சித்தாந்த, அறிதலின், சிவஞானபோதம், என்றும், உடல், கண்டறியும், எனது, அவ்வான்மாவாம், அவ்வுடலின், இன்பத்துன்பஞ், இலது, மூன்றாம், இலக்கியங்கள், சூத்திரம், ஐம்புலன், வான்மாவாம், ஒடுக்கம், அல்லை