சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
அவ்வினையைச் செய்வதனில் அவ்வினைஞர் தாம் சென்றங்கு அவ்வினையைக் காந்த பசாசம் போல்- அவ்வினையைப் பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல் ஆர்தான் அறிந்து அணைப்பார் ஆங்கு. | 11 |
நெல்லிற்கு உமியும் நிகழ் செம்பினில் களிம்பும் சொல்லில் புதிதன்று தொன்மையே -- வல்லி மலகன்மம் அன்று உளவாம் வள்ளலால் பொன்வாள் அலர்சோகம் செய் கமலத்து ஆம். | 12 |
6. மூன்றாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இவ்வான்மாக்கள் மாறி பிறந்து வரும் என்றது.
ஏது: தோற்றமும் ஈறும் உள்ளதற்கு அல்லது உளதாதல் இன்மையான்.
உதாரணம்:
கண்ட நனவைக் கனவு உணர்வில் தான் மறந்து விண்படர்ந்து அத்தூடு வினையினால் -- கண்செவிகெட்டு உள்ளதேத் தோற்ற உளம் அணுவாய்ச் சென்றுமனம் தள்ள விழும் கருவில் தான். | 13 |
அரவுதன் தோல் உரிவும் அக்கனவும் வேறு பரகாயம் போய்வரும் அப்பண்பும் -- பரவில் குடாகாய ஆகாயக் கூத்தாட்டம் என்பது அடாது உள்ளம் போமாறு அது | 14 |
7. நாங்காம் அதிகரணம்
மேற்கோள்: இனி, நீக்கமின்றி நிற்குமன்றே என்றது
ஏது: அவன் ஏகன் அநேகன் இரண்டும் இன்றிச் சருவவியாபியாய் நிற்றலான்.
உதாரணம்:
எங்குமுளன் என்ற அளவை ஒன்று அன்று இரண்டென்னில் எங்கும் உளன் அன்று, எவற்று எவனும்--- அங்கண் அவை அவன் அன்றில்லை பொன்னொளிப்பொல் ஈசன் அவையுடமை ஆளாம் நாம் அங்கு. | 15 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞானபோதம், அன்று, சாத்திரங்கள், சித்தாந்த, அவன், தான், உதாரணம், மேற்கோள், இலக்கியங்கள், அதிகரணம், என்றது