சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நண் அனல் வேவாத நற்றவர் தம்மினும் பண் அமர மாச்செலுத்தும் பாகரினும் -- எண்ணி அரனடி ஓர்பவர் ஐம்புலனில் சென்றும் அவர்திறல் நீங்கார் அதற்கு | 66 |
சதசத்தாம் மெய்கண்டான் சத்தருளிற் காணின் இதமித்தல் பாசத்தில் இன்றிக் - கதமிக்கு எரிகதிரின் முன்னிருள்போல், ஏலா அசத்தின் அருகு அணையார், சத்து அணைவார் ஆங்கு | 67 |
பதினொன்றாம் சூத்திரம்
காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே |
என்பது சூத்திரம்
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், பரமேசுரனது சீபாதங்களை அணையுமாறு உணர்த்துதல் நுதலிற்று
34. முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, அவனும் அவற்றது விடயத்தை உணரும் என்றது
ஏது: இவ்வான்மாக்கள் அவனையின்றி அமைந்து ஒன்றையும் விடயியா ஆகலான்
உதாரணம்:
ஐந்தையும் ஒக்க உணராது அவற்றுணர்வது ஐந்தும்போல் நின்றுணரும் ஆகலான் -- ஐந்தினையும் ஒன்றொன்றாப் பார்த்துணர்வது உள்ளமே எவ்வுலகும் ஒன்றொன்றாப் பார்க்கும் உணர்ந்து | 68 |
ஏகமாய் நின்றே இணையடிகள் ஒன்றுணரப் போகமாய்த் தான் விளைந்த பொற்பினால் - ஏகமாய் உள்ளத்தின் கண்ணானான் உள்குவார் உள்கிற்றை உள்ளத்தாற் காணானோ உற்று | 69 |
35. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனிப் பத்தியினான் மறவாது ஏத்த அவனது சீபாதத்தை அணையும் என்றது.
ஏது: அவன் அன்னியமின்றிச் செய்வோர் செய்திப்பயன் விளைத்து நிற்றலான்.
உதாரணம்:
அருக்கன் நேர் நிற்பினும் அல்லிருளே காணார்க்கு இருட்கண்ணே பாசத்தார்க்கு ஈசன் --- அருட்கண்ணால் பாசத்தை நீக்கும் பகல் அலர்த்தும் தாமரைபோல் நேசத்தின் தன்னுணுர்ந்தார் நேர். | 70 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞானபோதம், சாத்திரங்கள், சித்தாந்த, ஒன்றொன்றாப், உதாரணம், நேர், ஆகலான், ஏகமாய், அதிகரணம், இலக்கியங்கள், சூத்திரம், மேற்கோள், என்றது