சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
மன்னும் இருளை மதிதுரந்த வாறு அன்பின் மன்னும் அரனே மலம் துரந்து -- தன்னின் வலித்து இரும்பைக் காந்தம் வசஞ்செய்வான் செய்தல் சலிப்பில் விகாரி அலன் தான் | 71 |
நசித்து ஒன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா நசித்திலதேல் ஒன்றாவது இல்லை -- நசித்துமலம் அப்பு அணைந்த உப்பின் உளம் அணைந்து சேடமாம் கப்பு இன்றாம் ஈசன் கழல் | 72 |
பொன்வாள்முன் கொண்மூவிற் புக்கு ஒடுங்கிப்போய் அகலத் தன்வாளே எங்குமாம் தன்மைபோல் -- முன்வாள் மலத்தின் மறைந்து உள்ளம் மற்று உலகை உண்ணும் மலத்து இரித்துச் செல்லும் வரத்து | 73 |
பன்னிரண்டாம் சூத்திரம்
செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ மால்அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தாமும் அரன் எனத் தொழுமே |
என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், அசிந்திதனாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு வழிபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
36. முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, ஆணவம் மாயை கான்மியம் எனும் மலங்களைக் களைக என்றது.
ஏது: அவைதாம் ஞானத்தை உணர்த்தாது அஞ்ஞானத்தை உணர்த்தும் ஆகலான்.
உதாரணம்:
புண்ணிய பாவம் பொருந்தும் இக் கான்மியமும் மண்முதல் மாயைகாண் மாயையும் -- கண்ணிய அஞ்ஞானம் காட்டும் இவ் ஆணவமும் இம் மூன்றும் மெய்ஞ்ஞானிக் காகா விடு. | 74 |
37. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனிச் சிவபத்தர்களோடு இணங்குக என்றது.
ஏது: அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துவார் ஆகலான்.
உதாரணம்:
மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்குஞ் சிறப்பிலார் தம்திறத்துச் சேர்வை -- அறப்பித்துப் பத்தர் இனத்தாய்ப் பரன் உணர்வினால் உணரும் மெய்த்தவரை மேவா வினை | 75 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞானபோதம், சாத்திரங்கள், சித்தாந்த, அஞ்ஞானத்தை, என்றது, உதாரணம், மேற்கோள், ஆகலான், உள்ளம், இலக்கியங்கள், மன்னும், சூத்திரம், அதிகரணம்