சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
மண்முதல் நாளம் அலர் வித்தை கலாரூபம் எண்ணிய ஈசர் சதாசிவமாம் -- நண்ணில் கலை உருவாம் நாதமாம் சத்தி அதன் கண்ணாம் நிலைஅதில் ஆம் அச்சிவன்தாள், நேர். | 61 |
உண்மை அதிகாரம்: பயனியல்
பத்தாம் சூத்திரம்
அவனே தானே ஆகிய அந்நெறி ஏகன் ஆகி இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை இன்றே |
என்பது சூத்திரம்.
வார்த்திகப் பஒழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், பாசக்ஷ்யம் பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
32: முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டுப் பரமேசுவரன் இவ்வான்மாவாய் நின்ற முறைமையான் அவனிடத்து ஏகனாகி நிற்க என்றது.
ஏது: அவ்வாறு நிற்கவே யான் எனது என்னும் செருக்கு அற்று அவனது சீபாதத்தை அணையும் ஆகலான்.
உதாரணம்:
நான் அவன் என்று எண்ணினர்க்கும் நாடும் உளம் உண்டாதல் தான் என ஒன்று இன்றியே தானதுவாய் --- நான் எனவொன்று இல்லென்று தானே எனும் அவரைத் தன்னடிவைத்து இல்லென்று தான் ஆம் இறை | 62 |
33. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இறைபணி வழுவாது நிற்க என்றது.
ஏது: அவன் அருளால் அல்லது ஒன்றையும் செய்யான் ஆகவே அஞ்ஞான கன்மம் பிரவேசியா ஆகலான்.
உதாரணம்:
நாம் அல்ல இந்திரியம் நம்வழியின் அல்ல, வழி நாம் அல்ல நாமும் அரனுடைமை -- ஆம் என்னில் எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லைவினை முற்செய்வினையும் தருவான் முன் | 63 |
சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல் சார்ந்தாரைக் காத்தும் சலமிலனாய்ச் -- சார்ந்தடியார் தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல் ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு | 64 |
இங்குளி வாங்கும் கலம்போல ஞானிபால் முன்செய் வினை மாயை மூண்டிடினும் -- பின்செய்வினை மாயையுடன் நில்லாது மற்றவன்தான் மெய்ப்பொருளே ஆய அதனால் உணரும் அச்சு | 65 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், நிற்க, அல்ல, சாத்திரங்கள், சித்தாந்த, சிவஞானபோதம், நான், தான், அவன், நாம், சார்ந்தாரைக், உதாரணம், இல்லென்று, மேற்கோள், சூத்திரம், இலக்கியங்கள், தானே, இறைபணி, என்றது, அதிகரணம், ஆகலான்