சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
30. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்து என்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்று உணரற்பாற்று
ஏது: இனி அசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்றது வேற்றியல்பாகிய வன்னபேதங்களை வேற்றியல்பு என்று கண்டு கழிப்பின் உளதாய் நிற்பது படிக சொரூபமாம் துணையான்
உதாரணம்:
நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த் தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் -- அற்புதம்போல் ஆனா அறிவாய் அளவுஇறந்து தோன்றானோ வானே முதல்களையின் வந்து | 56 |
சுட்டி உணர்வதனைச் சுட்டி அசத்தென்னச் சட்ட இனியுளது சத்தேகாண் --- சுட்டி உணர்ந்த நீ சத்து அல்லை உண்மையைத் தைவம் புணர்ந்ததனால் பொய்விட்டுப் போம் | 57 |
கண்டதை அன்று அன்று எனவிட்டுக் கண்டு அசத்தாய் அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் -- பண்டு அணைந்த ஊனத்தை தான்விடுமாறு உத்தமனின் ஒண்கருட சானத்தின் தீர்விடம்போல் தான் | 58 |
31. மூன்றாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இவ்விடத்து ஸ்ரீ£ பஞ்சாக்கரத்தை (திருவைந்தெழுத்தை) விதிப்படி உச்சரிக்க என்றது.
ஏது: இவ்வான்மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானத்தை வேம்பு தின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கி நிற்குமாகலின் அது நீக்குதற்கு எனக் கொள்க.
உதாரணம்:
அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டு அரனை அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில் -- அஞ்செழுத்தால் குண்டலினியிற் செய்து ஓமம் கோதண்டம் சானிக்கில் அண்டனாம் சேடனாம் அங்கு | 59 |
இந்துவில் பானுவில் இராகுவைக் கண்டுஆங்குச் சிந்தையில் காணில் சிவன் கண்ணாம் -- உந்தவே காட்டாக்கின் தோன்றி கனல்சேர் இரும்பென்ன வாட்டானாம் ஓது அஞ்செழுத்து | 60 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுட்டி, நிற்பது, சிவஞானபோதம், கண்டு, அஞ்செழுத்தால், சித்தாந்த, சாத்திரங்கள், உளதாய், அன்று, என்றது, உதாரணம், வன்னபேதங்களை, இலக்கியங்கள், அதிகரணம், மேற்கோள், அசத்தாயுள்ள, ஞானசொரூபம்