சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
28: நான்காம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இவ் ஆன்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தை அணையும் என்றது.
ஏது: ஊசல் கயிறு அற்றால் தாய்தரையேயாம் துணையால்.
உதாரணம்:
சிறைசெய் நின்ற செழும்புனலின் உள்ளம் சிறைசெய் புலனுணர்வில் தீர்ந்து -- சிறைவிட்டு அலைகடலில் சென்று அடங்கும் ஆறுபோல் மீளாது உலைவுஇல் அரன் பாதத்தை உற்று | 51 |
எவ்வுருவும் தானென்னில் எய்துவார் இல்லைதாள் இவ்வுருவின் வேறேல் இறைஅல்லன் -- எவ்வுருவும் கண்போல் அவயவங்கள் காணாஅக் கண் இல்லார் கண்பேறே காண் அக் கழல் | 52 |
ஐம்பொறியின் அல்லை எனும் அந்த தர சிவனை ஐம்பொறியை விட்டு அங்கு அணைசகலன் -- ஐம்பொறியின் நீங்கான்நீர்ப் பாசிபோல் நீங்குமல கன்மம்வரின் நீங்கானை நீங்கும் நினைந்து. | 53 |
ஒன்பதாம் சூத்திரம்
ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத் தண் நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ் செழுத்தே |
என்பது சூத்திரம்
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், ஆன்மசுத்தி பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று
29. முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, அம்முதலை ஞானக் கண்ணினாலேயே காண்க என்றது.
ஏது: அவன் வாக்கு மன அதீத கோசரமாய் நிற்றலான்.
உதாரணம்:
நாடியோ என்போ நரம்புசீக் கோழையோ தேடி எனையறியேன் தேர்ந்தவகை -- நாடி அரன் தன்னாலே தனையும் கண்டு தமைக்காணார் என்னாம் என அறிவார் இன்று | 54 |
காட்டிய கண்ணே தனைக்காணா கண்ணுக்குக் காட்டாய உள்ளத்தைக் கண் காணா -- காட்டிய உள்ளம் தனைக்காணா உள்ளத்தின் கண்ணாய கள்வன்தான் உள்ளத்திற் காண் | 55 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தாந்த, சாத்திரங்கள், சிவஞானபோதம், சூத்திரம், பாசம், ஐம்பொறியின், காட்டிய, தனைக்காணா, காண், நாடி, ஞானக், உள்ளம், மேற்கோள், அதிகரணம், இலக்கியங்கள், என்றது, உதாரணம், அரன், சிறைசெய், எவ்வுருவும்