சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சங்கிராந்தவாதி சங்கற்பம்
நீங்கா தொளிருயிர் விளக்கென நிற்கு மளப்புறு மறிவின் றிறைவர்க் கேது மறியவேண்டின்றே மன்னு மான்ம சந்நிதி யளவிற் காந்த பசாசத் தேய்ப்ப வாய்ந்த வுயிருட லியக்குஞ் செயலுறு பூட்டைப் பலவகை யுறுப்பு மிலகிய தொழில்போ லைம்பொறி புலன்க ளின்புறு மன்றே யினைய வாய்தலி னிகழ்தரு பயனவை யந்தக் கரண முந்தி யுணர்ந்திடு மிவையகல் வுழியைம் பொறிபுல னிகழா வுயிர்நீங் கிடிலுடல் செயலில தன்றே யிவ்வகை வினையின் செவ்விதி நடத்தும் பழமல நீங்க நிகழும் காலை யேற்றோர் முகவொளி தோற்றுங் கலனெனத் தலைவன தருளுயிர் நிலவிடு நிலவக் காட்டத் தங்கி மாட்டத் தங்கிய தன்மையு மளத்துப் புல்வையி னீப்பும் போன்றது வாகித் தோன்றிடி மதனாற் பசுகர ணங்கள் சிவகர ணங்க ளாக மாறி யறிவு மேக மாமுயி ரியானென தின்றே. |
சங்கிராந்தவாதி சங்கற்ப நிராகரணம்
இன்றுன துரையி னன்றி யுயிரொளிர் தீபம் போலத் தாபந் தரினிருள் செறியுந் தன்மையெ னறிவில தாகி லொளியென வுரைத்த தெளிவதற் கேதாஞ் சந்நிதி யளவின் மன்னுஞ் செயலுடல் காந்தம் போல வாந்த தென்ற தன்மையு முணராப் புன்மைய தன்றே யுயிருட லியக்கிற் றுயில்பெறுங் காலைச் செய்ததென் மனாதி யெய்துயிர் பொறிபுல னடத்த வாவியுஞ் சடத்தன வாயிற் பூட்டையிற் பூணி கூட்டல் பெறாதே புலனைம் பொறியி நிலவிடு மென்றனை யஞ்சு மொருகாற் றுஞ்சா தறிதற் கழிவென் றருஞ்செழு மலரிலை யொடுபலங் கனிதரு வதுபோ லினையவை யைந்து மொன்றொன் றாக நின்றறி வுறுமெனி லொன்றின் பயனளி யொன்றறி யாதா லிதுவே யல்லது கதுமென விருசெவி யிருகூற் றொருகாற் றெரியாத் தன்மைவந் தெய்து மனாதியு மெய்யுயிர்ச் செயலுந் தனக்கில தொருவற் கெனத்தெளி கிலையே நோக்கு முகவொளி நீக்கா தானெனக் கவருந் தன்மை முகுரம் போலக் கொடுத்தது கோடற் கடுத்து துண் டன்றே காட்டத் தங்கி கூட்டக் கூடு மிந்தனத் தியற்கை வெந்தழ றாங்கா வுப்பளத் தடுத்த புற்பலா லங்கள் சடத்த வேனுங் கொடுத்தது கொள்ளுந் தன்மை யுண்டுனக் கின்மைய தன்றே யவமுறு கருவி சிவமய மாமெனக் கூறினை யாகம் வேறுருக் கவரா தென்பதே னவைமுற் றுன்பந் துடைக்குந் திருவருண் மருவ வுரியன வென்னி லருளுரு மாயா விருளின தாங்கொல் சத்த பரிச ரூப ரசநறை யெத்திறத் தினதரு ளியம்புக வன்றியு நிறைந்து நீயாய் நின்றனை யேனு மறைந்தைம் புலனாய் வாரா யென்றுங் கரண மெல்லங் கடந்தனை யென்றும் மரணமை யைந்தி னப்புறத் தென்றும் முன்னருட் டலைவர் பன்னின ரெனவு மினையவை யொழிய வறிகுவ தெவ்வா றென்ற நிற்கலிக் கொன்றிய வின்பங் கூறுத றகுமருட் பேறினை யன்றே யேக முயிரறி வாக மொழிந்தனை யிருபொரு ளொருமை மருவிய திலதே யிவ்வகை கிடக்க மெய்வகை கேண்மதி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சங்கற்ப, நிராகரணம், நூல்கள், தன்றே, சாத்திரங்கள், சித்தாந்த, தங்கி, காட்டத், கொடுத்தது, நிலவிடு, தன்மை, தன்மையு, பொறிபுல, இலக்கியங்கள், சங்கிராந்தவாதி, சந்நிதி, யிவ்வகை, முகவொளி