சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சிவசமவாதி சங்கற்ப நிராகரணம்
பெத்த நிலை மறுப்பு
சேர்ந்த மும்மை வாய்ந்த ஞானமு மொருகா லன்றித் தெரிவுற நிற்கி லொன்பொருள் காணும் பண்பினுக் கொருகாற் பரிதியு மதியு மெரிதரு விளக்கும் வேண்ட லின்றே காண்டகு காலை யொன்றொன் றாக நின்றறி வுறுமெனி லந்நிய மறியாமன்னுயிர் பொறிபுலன் றானோ வறியா தலைவர்க் குலகினை யானா வறிவா லறிய வேண் டின்றே கொழுந்தழ றகுமெனி லழுந்திடு மவத்தையிற் றிரியாத் தலைவர் தெரியாத் தன்மைவந் தெய்தலாகா மெய்யுறு பொருட்கு முன்னர்க் கீடந் தன்னென வெடுத்த வேட்டுவ னியல்பு கூட்டல் பெறாதே வண்டிறும் பெடாவுட் கொண்டது தனக்கு மந்திர வாதந் தந்தது மிலதே யெடுத்திடு மதனா லடுத்ததென் றறையிற் கருமயிர்க் குட்டி யிருசிறைப் பறவை யாயின தெடுத்த தாயர்சாற் றிலரே பிறவிப் பேதத் துறையிவை கிடக்க வேயு மித்திற னாயுங் காலை யோகத் தகுதி யாகத் தகுமே ஞான மின்மையென் றோதுவ தெவனெனில் உயிரு முணர்வும் பயிலுத லின்றி வேட்டுவ னுருவ மென்புழு வுணர்வு மாறுத லானு மூறுடைத் தன்றே யீசன தியல்பரு ளெய்துயி ரியற்றல் பேசுத றவறெனப் பெருமறை யறைய வைந்தொழி லுயிருந் தந்திட றகுமோ யாவதென் முன்னா ணாவலர் பெருமான் பண்டொரு முதலை யுண்டமைந் தனைவர வழைத்தன னென்றாய் பிழைப்பில ததூஉந் தந்திட வேண்டு மென்றன ரன்றே யின்னவை கிடக்க முன்னவன் றன்மை யெய்தின ரெல்லாச் செய்தியுஞ் செய்வ ரிரும்பெரி யெய்தித் தருஞ்செய றகவெனிற் பொருணிலை கிடக்க வொருதிட் டாந்தப் பேறே யாயிற் சீறாக் கதுவிய புனலொரு புடைசேர் கனறகு மாயினும் வேறொரு பொருளை நீறாக் கிலதே நெருப்பெனு மிதனி னுருத்தனி காட்டுக வங்கியு மொன்றிற் றங்கிநின் றல்லது தன்றொழி னடத்தா தென்றறி யினிநீ யிரும்பனற் செய்தி தரும்பரி சுளதோ வதுவெனோ ரலகை பொதிதருங் காலை யதன்செய லனைத்து மிவன்செய லாமா லவனிவ னாகி லிவனவன் செய்திக் கென்னவை யன்னிற் பின்னுறு செயலு மதன்செயலன்றி யிவன்செய லாகி லிவன்செயல் பேயின் றன்செய லாகி யிருந்த வாவெனத் தெரிந்திட வேண்டும் தெரியா தாகிற் புரியிற் கடுங்கன லெரிந்த தென்னு மிதுதகு மன்றியு மவனிவ னாகி லிவனவன் செய்தி யென்று செய்வா னென்றிய மதத்தா யெல்லா மறிதல் செல்லா துயிர்கள் சிற்றறி வெனுமிச் சொற்றவ றாகு மென்பதெ னலகை தன்பத மடைந்தோர் கொண்ட வாறு கண்டன மென்னின் மூங்கை யந்தருற் றோங்கிய குணங்குறி செய்வதெ னின்னும் பௌவமுற் றழுந்தினு நாழி கொள்ளா தாழியி னலைபுன நானாழி என்னுஞ் செய்யுள் லதனாற் கருத்து முதலுள தாக வேண்டு மன்றே யீண்டினி யமையு மெல்லா மெனுமிச் சொல்லாற் படும்பொரு ளனைத்துந் தாக்காத் தனிப்பரத் துற்றவர்க் கெவ்வகை யுணர்வு செய்வதென் செப்புக வொன்றி னொன்றா மொன்றா துலகி னின்ற போதுயிர் நேரா மன்றே முத்தி யுற்ற நற்றவ ரவையிடைச் சேர்வ ரென்றனை சார்தரு முத்தி சாலோக் கியமோ சாயுச் சியமெனிற் பந்த முற்ற கந்தல கழித்த வறிவினோ டறிவு பிறியாப் பெற்றி வேண்டு மென்றதற் கீண்டிவ ரிவ்வா றிருப்ப ரென்பதற் குருத்தான் வேண்டு மண்ணல தருளி னண்ணி யிருப்பினுஞ் சீவன் முத்தரென் றோதின ரகன்று நீங்கியு முருவ நீங்கா தாயி னோங்கிய முத்தி யாவதென் னுரைக்க செடியுட லணுகாக் குடிலை கொடுக்குமென் றோதினை நீயே பேதாய் பகட்டுர லொளிர்சினை முச்சித் தளிரெனு மிதுதகு மிச்சா ரூப நச்சின ரென்னின் மும்மலத் தேது மின்மைய தன்றே யிதுவளர் முத்திப் பதமென வியம்புவ ரீங்கிவை நிற்க |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சங்கற்ப, வேண்டு, நிராகரணம், கிடக்க, காலை, சித்தாந்த, முத்தி, சாத்திரங்கள், லிவனவன், மன்றே, லாகி, மிதுதகு, னாகி, தன்றே, இலக்கியங்கள், வேட்டுவ, தந்திட, யாவதென், செய்தி