ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.022.திருப்பழமண்ணிப்படிக்கரை
7.022.திருப்பழமண்ணிப்படிக்கரை
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர்.
தேவியார் - வடிக்கண்ணமுதகரநாயகியம்மை.
219 |
முன்னவன் எங்கள்பிரான் முதல் சென்னியில் எங்கள்பிரான் திரு மன்னிய எங்கள்பிரான் மறை பன்னிய எங்கள்பிரான் பழ |
7.022.1 |
எல்லார்க்கும் முன்னே உள்ளவனும், தனக்கு முன்னுள்ள பொருள் இல்லாதவனும், யாவரினும் தலையாயவனும் அழகிய நீலகண்டத்தை உடையவனும், என்றும் அழியாது நிலைபெற்றிருப்பவனும், நான்கு வேதங்களையும் கல்லால மர நிழலிலிருந்து சொல்லியவனுமாய், எங்கள் தலைவனுமாய் உள்ள இறைவன் எழுந்தருளியிருப்பது, 'திருப்பழமண்ணிப்படிக்கரை' என்னும் தலமே.
220 |
தொண்டங் கடிபரவித் தொழு வெண்டிங்கள் வெண்மழுவன் விரை பண்டங்கன் மேயவிடம் பழ |
7.022.2 |
திரண்ட தலையை அணிந்த முடியினையுடைய சிவபிரானது திருவடிகளில் நல்ல அடியார்கள் மலர்களை இட்டு அவ்வடிகளை வணங்கி, முன்னிலையாகவும் படர்க்கையாகவும் துதித்து ஆடுகின்றதும், வெண்மையான பிறையை அணிந்தவனும், வெள்ளிய மழுவை ஏந்தியவனும், பகைவர்மேல் விரைதல் பொருந்திய, ஒளியையுடைய மூவிலை வேலை (சூலத்தை) உடைய, 'பண்டரங்கம்' என்னும் கூத்தினை உடையவனும் ஆகிய அப்பெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கின்றதும் ஆகிய இடம் 'திருப்பழமண்ணிப் படிக்கரை' என்னும் தலமே.
221 |
சூடுமின் தொண்டருள்ளீர் உம வாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந் பாடுமின் பத்தருள்ளீர் பழ |
7.022.3 |
அன்புடையவர்களே, அன்புக் கூத்தினை ஆடுங்கள்; தொண்டராய் உள்ளவர்களே, சிவபெருமானது திருவடிக்கு ஆட்பட்டவர்களது அடியில் உள்ள பொடியை எடுத்துத் தலைமேல் சூடிக்கொள்ளுங்கள்; பத்தராய் உள்ளவர்களே, உம்மவரோடு எம்மவரும் சூழ ஒன்று கூடி, மனம் மெலிதற்குக் காரணமான இல்வாழ்க்கையில் கிடந்து வருந்தாமல் நன்கு சென்று, திருப்பழமண்ணிப் படிக்கரையைப் பாடுங்கள்.
222 |
கெடுதலை யேபுரிந்தான் கிள நடுதலை யேபுரிந்தான் நரி படுதலை யேபுரிந்தான் பழ |
7.022.4 |
உலகத் தொகுதியை அழித்தலை விரும்பினவனும், வானத்தில் திரிந்த மூன்று மதில்கள் கெட்டொழிதலை விரும்பி வில் நாணில் அம்பைப் பூட்டுதலை விரும்பினவனும், நரி உமிழ்ந்த எச்சிலாகிய, வெண்மையான, அழிந்த தலையை விரும்பியவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம், 'திருப்பழமண்ணிப் படிக்கரை' என்னும் தலமே.
223 |
உங்கைக ளாற்கூப்பி உகந் மங்கையொர் கூறுடையான் வா அங்கையில் வெண்மழுவன் அலை பங்கய பாதனிடம் பழ |
7.022.5 |
தொண்டர்களே, உமையை ஒரு கூறில் உடையவனும், தேவர்களுக்கு முதற்பொருளாய தலைவனும், அகங்கையில் வெள்ளிய மழுவை உடையவனும், கொல்லுதல் பொருந்திய ஒளியை யுடைய முத்தலை வேலை (சூலத்தை) ஏந்திய, தாமரை மலர்போலும் பாதங்களையுடையவனும் ஆகிய இறைவனது இடமாகிய திருப்பழ மண்ணிப்படிக்கரையை விரும்பித் துதித்து உங்கள் கைகளால் கூப்பித் தொழுங்கள்.
224 |
கொடிபடு மூரிவெள்ளை எரு கடியவன் காலன்றன்னைக் கறுத் படியவன் பாசுபதன் பழ |
7.022.6 |
கற்கள் பொருந்திய கோட்டைகளில் தீமை உண்டாகத் தீயை எழுவித்தவனும், நல்ல புனங்களில் மேய்வதாகிய, தனது கொடியிற் பொருந்திய வலிய எருதாகிய ஆனேற்றை ஏறுதற்கு ஊர்தியாகவும் கொண்டவனும், பாதத்தால் கொடிய வலிய காலனைக் காய்ந்தவனும், செவ்விய பவளம் போலும் திருமேனியை உடையவனும், பாசுபத வேடத்தனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது, 'திருப்பழமண்ணிப்படிக்கரை' என்னும் தலமே.
225 |
கடுத்தவன் தேர்கொண்டோடிக் கயி எடுத்தவன் ஈரைந்துவாய் அரக் விடுத்தவன் கைநரம்பால் வேத படுத்தவன் பால்வெண்ணீற்றன் பழ |
7.022.7 |
அரக்கனும், தேரைச் செலுத்திக்கொண்டு சென்று, அதனைத் தடுத்தலால் சினங்கொண்டவனாய்க் கயிலாயமாகிய நல்ல பெரிய மலையை எடுத்தவனும் ஆகிய இராவணனது பத்து வாய்களும் பத்துத் தலைகளில் பொருந்தியிருந்து அலறும்படி ஆக்கியவனும், பின்பு அவன் கை நரம்பாகிய வீணையால் வேதத்தொடு கூடிய இசைகளைப் பாட, அவனை நலத்திற் பொருந்தச் செய்தவனும், பால் போலும் வெள்ளிய திருநீற்றை உடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது, 'திருப்பழமண்ணிப்படிக்கரை' என்னும் தலமே.
226 |
திரிவன மும்மதிலும் மெரித் அரியவன் அட்டபுட்பம் மவை கரியவன் நான்முகனும் மடி பரியவன் பாசுபதன் பழ |
7.022.8 |
இடம் பெயர்ந்து திரிவனவாகிய மூன்று மதில்களை எரித்தவனும், தேவர்கட்குத் தலைவனும், அடைதற்கு அன்புடைய திருமாலும் பிரமனும் அட்ட புட்பங்களால் திருவடியில் அருச்சித்தும் அடியும் முடியும் காணமாட்டாத அளவிறந்தவனும், பாசுபத வேடத்தை உடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது, 'திருப்பழமண்ணிப்படிக்கரை' என்னும் தலமே.
227 |
வெற்றரைக் கற்றமணும் விரை துற்றரைத் துற்றறுப்பான் துன்ன பெற்றரைப் பித்தரென்று கரு பற்றரைப் பற்றிநின்று பழி |
7.022.9 |
மிகுந்த பற்றுக்களை அறுத்தற் பொருட்டு உடையில்லாத அரையினை உடையராதலைக் கற்ற சமணர் வேடத்திலே மனம் விரையாது நீங்கி, கீளொடு பிணைத்தலை உடைய கோவண ஆடையை அணிந்த தொண்டர்களே, நஞ்சினை உண்ணும் உணவுடையவரும், எருதாகிய ஊர்தியை உடையவருமாகிய சிவபெருமானாரை அதுபோல்வனவற்றை நோக்கிப் பித்தரென்று இகழ்ச்சியாக நினையாதீர்கள்; திருப்பழமண்ணிப்படிக்கரையுள் கோயில் கொண்டிருக்கும் அவரையே துணையாகப் பற்றிநின்று, பழிபாவங்களிலிருந்து நீங்குங்கள்.
228 |
பல்லுயிர் வாழுந்தெண்ணீர்ப் பழ அல்லியந் தாமரைத்தார் ஆ சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க் எல்லியும் நன்பகலும் மிடர் |
7.022.10 |
பல உயிர்கள் வாழ்கின்ற தௌந்த நீரையுடைய, 'திருப்பழமண்ணிப்படிக்கரை' என்னும் தலத்தை, அக இதழ்களையுடைய தாமரை மாலையை அணிந்த நம்பியாரூரன் புகழ்ந்து சொன்ன இத்தமிழ்ப் பாடலை இரவிலும், நல்ல பகலிலும் சொல்லுதலும் கேட்டலும் வல்லராகின்ற அத்தன்மையார்க்கும், அவரைச் சார்ந்து உற்றார்க்கும், அவ்வுற்றாரைப் பற்றி வரும் சுற்றத்தார்க்கும் துன்பம் மிகுதல் இல்லை.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.022.திருப்பழமண்ணிப்படிக்கரை , மண்ணிப், திருப்பழமண்ணிப்படிக்கரை, படிக்கரையே, ஆகிய, உடையவனும், என்னும், தலமே, இறைவன், எழுந்தருளியிருப்பது, நல்ல, யேபுரிந்தான், பொருந்திய, எங்கள்பிரான், இடம், வெள்ளிய, அணிந்த, திருப்பழமண்ணிப், திருமுறை, சென்று, உள்ளவர்களே, மனம், விரும்பினவனும், பாசுபதன், போலும், பாசுபத, பித்தரென்று, பற்றிநின்று, எருதாகிய, வலிய, தொண்டர்களே, தலைவனும், தாமரை, மூன்று, மழுவை, உள்ள, வெண்மழுவன், விரை, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், ஏழாம், தேவாரப், யார்கதிர், மூவிலைய, சூலத்தை, உடைய, கூத்தினை, வேலை, வெண்மையான, தலையை, துதித்து, விரும்பி