ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.023.திருக்கழிப்பாலை
7.023.திருக்கழிப்பாலை
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்.
தேவியார் - பொற்பதவேதநாயகியம்மை.
229 |
செடியேன் தீவினையில் தடு அடியான் ஆவஎனா தொழி முடிமேல் மாமதியும் அர வடிவே தாம் உடையார் மகி |
7.023.1 |
திருமுடியின் மேல், பெருமை பொருந்திய பிறையும், பாம்பும் பகையின்றி ஒருங்கு கூடித் துயில்கின்ற வடிவத்தை உடையவர், குணம் இல்லாதவனாகிய யான் தீவினையில் கிடந்து தடுமாறுவதை நேரே பார்த்தாலும், 'அந்தோ! இவன் நம் அடியவன்!' என்று இரங்காது தாம் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள திருக்கழிப்பாலையில், வாளா இருத்தல் தகுதியாகுமோ!
230 |
எங்கே னும்மிருந்துன் னடி அங்கே வந்தென்னொடும் முட இங்கே என்வினையை யறுத் கங்கா நாயகனே கழிப் |
7.023.2 |
திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக் கின்றவனே, நீயே உன் அடியவனாகிய யான் இப்பூமியிலே எங்காயினும் இருந்து உன்னை நினைத்தால், அங்கே வந்து என்னோடு கூடி நின்று, என் வினையை நீக்கி என்னை ஆண்டருள்கின்ற கங்கைக்கு நாயகன்.
231 |
ஒறுத்தாய் நின்னருளில் லடி பொறுத்தாய் எத்தனையுந் நா செறுத்தாய் வேலைவிடம் மறி கறுத்தாய் தண்கழனிக் கழிப் |
7.023.3 |
குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, உனது கருணையினாலே ஒரு பிழைக்காக முன்பு என்னை ஒறுத்தாய்; பின்பு அடியேன் செய்த பிழைகள் எத்தனையாயினும் அவை அனைத்தையும், நாய்போலும் என்னை ஒரு பொருளாக வைத்துப் பொறுத்துக் கொண்டாய்; தேவர்கள் இறவாதிருத்தற் பொருட்டுக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டத்தில் நிறுத்தினாய்; அதனால், அவ்விடம் கரிதாயினாய்; இவை உன் அருட்செயல்கள்.
232 |
சுரும்பார் விண்டமல ரவை அரும்பா நிற்குமனத் தடி விரும்பேன் உன்னையல்லால் ஒரு கரும்பா ருங்கழனிக் கழிப் |
7.023.4 |
கரும்புகள் நிறைந்த கழனிகளையுடைய திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, வண்டுகள் ஒலிக்கின்ற, அப்பொழுது மலரும் மலர்களைத் தூவி, பாய்தற்குரிய கண்ணீர் அரும்புகின்றமைக்குக் காரணமான மனத்தையுடைய அடியார்களோடு கூடி அடியேன் உனக்கு அன்புசெய்வேன்; உன்னையன்றி வேறொரு தெய்வத்தை என் மனத்தாலும் விரும்பேன்; இஃது என் உணர்விருந்தவாறு.
233 |
ஒழிப்பாய் என்வினையை உகப் தெழிப்பாய் மோதுவிப்பாய் விலை சுழிப்பால் கண்டடங்கச் சுழி கழிப்பா லைமருவுங் கன |
7.023.5 |
நீர்ச் சுழிகளை, அவை கழியிடத்தையடைந்து அடங்குமாறு தாங்கி நிற்கின்ற தெருக்களையுடைய திருக்கழிப் பாலையில் எழுந்தருளியிருக்கின்ற தீயேந்திய கையினையுடையவனே, நீ என்னை உனக்கு உரியவனாக்கிக்கொண்ட விலைப் பத்திரத்தை உடையையாகலின். என்னை விரும்பி என்னோடு அளவளாவினும் அளவளாவுவாய்; பின் அது காரணமாக, என் வினையை நீக்கி என்னை இன்புறச் செய்யினும் செய்வாய்; அன்றி என்னை வெகுண்டு உரத்த கடுஞ்சொற்களால் இகழினும் இகழ்வாய்; பின் அது காரணமாக, என்னைத் தண்டிக்கச் செய்யினும் செய்வாய்; உன்னை 'இவ்வாறு செய்க' எனக் கட்டளையிடுவார் யார்?
234 |
ஆர்த்தாய் ஆடரவை அரை போர்த்தாய் யானையின்தோல் உரி பார்த்தாய் நுற்கிடமாம் பழி |
7.023.6 |
அரையின்கண் பொருந்திய புலித்தோலின்மேல், ஆடுகின்ற பாம்பைக் கட்டியவனே, யானையின் உரிக்கப்பட்டதாகிய தோலைப் புலால் நாற்றம் வீசும்படி போர்த்துக்கொண்டவனே, உனக்குத் தொண்டு செய்வாரது வினைகள் நீங்கும்படி திருக்கண் நோக்கம் வைத்து அவர்களைக் காத்தருளினவனே, உனக்கு இடமாவது, புகழையுடைய திருக்கழிப்பாலையே.
235 |
பருத்தாள் வன்பகட்டைப் பட உரித்தாய் யானையின்தோல் உல எரித்தாய் முப்புரமும் மிமை கருத்தா தண்கழனிக் கழிப் |
7.023.7 |
உலகமெல்லாம் வணங்குகின்ற மேலானவனே, தேவர்களது துன்பத்தை நீக்கியருளுகின்ற தலைவனே. குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பியெழுந்தருளியிருப்பவனே, நீ முன்பு யானையின் தோலைப் போர்வையாக விரும்பி, பருத்த கால்களையுடைய வலிய யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தாய்; முப்புரங்களையும் எரித்தாய்; இவை உனது வீரச் செயல்கள்.
236 |
படைத்தாய் ஞாலமெலாம் படர் உடைத்தாய் வேள்விதனை உமை அடர்த்தாய் வல்லரக்கன் தலை கடற்சா ருங்கழனிக் கழிப் |
7.023.8 |
விரிந்த புல்லிய சடையினை யுடைய எங்கள் இறைவனே, உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே, கடலைச் சார்ந்த, கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, நீ, உலகம் எல்லாவற்றையும் படைத்தாய்; தக்கனது வேள்வியை அழித்தாய்; வலிய அரக்கனாகிய இராவணனது பத்துத் தலைகளோடு இருபது தோள்களும் நெரியும்படி நெருக்கினாய்; இவை உன் வல்லமைகள்!
237 |
பொய்யா நாவதனாற் புகழ் மெய்யே நின்றெரியும் விளக் செய்யா னுங்கரிய நிறத் மையார் கண்ணியொடும் மகிழ் |
7.023.9 |
பொய் கூறுதல் இல்லாத நாவினால் புகழ்கின்றவர்களது மனத்தில் அணையாது எரியும் விளக்கே போல விளங்கி நிற்கின்ற பெரிய தேவனும், செம்மை நிறமுடைய பிரமனும், கருமை நிறமுடைய திருமாலும் அறிதற்கரியவனும் ஆகிய சிவபிரான் திருக்கழிப்பாலையையே விரும்பி, மைபொருந்திய கண்களையுடைய உமா தேவியோடும் எழுந்தருளியிருப்பான்.
238 |
பழிசே ரில்புகழான் பர கழியார் செல்வமல்குங் கழிப் தொழுவான் நாவலர்கோன் ஆ வழுவா மாலைவல்லார் வா |
7.023.10 |
பழி பொருந்துதல் இல்லாத புகழையுடையவனும், யாவர்க்கும் மேலானவனும் மேலிடத்தில் உள்ளவனும் ஆகிய கழியின்கண் பொருந்திய செல்வங்கள் பெருகுகின்ற திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற சிவபிரானை, அவனையே தொழுபவனாகிய திருநாவலூரார்க்குத் தலைவனாம் நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களைத் தவறு உண்டாகாதபடி பாடவல்லவர்கள், தேவர் உலகத்தை ஆள்பவராவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.023.திருக்கழிப்பாலை , விரும்பி, என்னை, கழிப், பாலை, மேயானே, திருக்கழிப்பாலையில், கழனிகளையுடைய, பாலையில், திருமுறை, திருக்கழிப்பாலை, திருக்கழிப், உனக்கு, பாலையதே, பொருந்திய, எழுந்தருளியிருப்பவனே, ஆகிய, எழுந்தருளியிருக்கின்ற, நிற்கின்ற, பின், ருங்கழனிக், நிறமுடைய, உரித்தாய், எரித்தாய், வலிய, படைத்தாய், தோலைப், யானையின், செய்வாய், யானையின்தோல், விரும்பேன், இல்லாத, செய்யினும், தண்கழனிக், தாம், யான், அங்கே, தீவினையில், திருச்சிற்றம்பலம், ஏழாம், தேவாரப், பதிகங்கள், என்வினையை, உன்னை, குளிர்ந்த, உனது, முன்பு, ஒறுத்தாய், நீக்கி, என்னோடு, கூடி, வினையை, அடியேன்